பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்!
Aug 23, 2025, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர்!

Web Desk by Web Desk
Aug 3, 2024, 05:00 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முருகப்பெருமானுக்கு ஆறு படைவீடுகள் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதேபோல் விநாயகப் பெருமானுக்கும் ஆறு படைவீடுகள் உள்ளன. அவற்றில் ஐந்தாவது படை வீடாக விளங்குவது தான் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் ஆகும். கற்பக விநாயகர் திருக்கோயிலைப் பற்றித் தான் இப்போது பார்க்கப் போகிறோம்.

விநாயகப் பெருமானுக்கு உரிய மிக பெரிய குடைவரைக்கோயிலான இந்த பிள்ளையார்பட்டி விநாயகர் கோயில், காரைக்குடிக்கும் புதுக்கோட்டைக்கும் நடுவே பிள்ளையார்பட்டி என்ற ஊரில் அமைந்துள்ளது.

காரைக்குடியில் இருந்து 12 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கும் இந்த ஊருக்கு பிள்ளையார்பட்டி என்ற பெயர் வருவதற்கு காரணமே இந்தக் கற்பகவிநாயகர் திருக்கோயில் தான்.

பல்லவ மன்னனாகிய மகேந்திரவர்ம பல்லவன் காலத்துக்கும், ஐந்து நூற்றாண்டுகளுக்கு முன்பு உருவான பழமை வாய்ந்தது இந்தக் குடைவரைக் கோயிலாகும். கி.பி. 4ம் நூற்றாண்டில் இந்த பிள்ளையார் சிலை வடிவமைக்கப்பட்டிருக்கிறது என தெரிய வருகிறது.

1,600 ஆண்டுகள் பழமையான இக்கோயில், ஒரு குடைவரைக் கோயிலாக, பாறையைக் குடைந்தெடுத்து அமைக்கப்பட்டிருக்கிறது. கற்பக விநாயகருக்கு முன்னே இடப் பக்கத்தில் கிழக்கு நோக்கி திருவீசர் எனும் சிவலிங்கம் உள்ளது. இந்த திருவீசரைத் தான் கற்பக விநாயகர் அனுதினமும் பூஜை செய்து வருகிறார் என்று தலபுராணம் தெரிவிக்கிறது.

கற்பக விநாயகரைப் போலவே, அந்தக் கருவறையைப் போலவே இந்த சிவலிங்கமும் மலைக் குன்றிலிருந்து வடித்து எடுக்கப்பட்டது என்று கூறப் படுகிறது.

இந்தக் கோயிலுக்கு உள்ளே சென்றதும் மிக உயர்ந்த கொடிமரம் அமைந்திருக்கிறது. இடது பக்கத்தில் கற்பக விநாயகர். எங்கு நின்று பார்த்தாலும் எல்லோருக்கும் நன்றாகத் தெரியும்படி மரப்பலகை மேல் நின்று கற்பக விநாயகரைத் தரிசிக்க முடிகிறது.

எல்லா விநாயகர் கோயில்களிலும், விநாயகப்பெருமான் தும்பிக்கை தவிர நான்கு கைகளுடன் இரு காட்சியளிப்பார். ஆனால் இந்த கற்பக விநாயகர் இரண்டு திருக் கரங்களுடன் காட்சியளிக்கிறார்.

6 அடி உயரத்தில், பெரிய கரிய, உருவத்தில், அகன்ற காதுகளுடன் அழகான ஆனைமுகத்துடன் கால்களைப் பாதியாய் மடித்து, ஆசனத்தில் வயிறு படியாமல் அமர்ந்திருக்கும் அர்த்த பத்மாசனம் எனும் திருக்கோலத்தில் தங்கக் கவசத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார் இந்த கற்பக விநாயகர்.

கற்பக விநாயகர் தனது வலது கையில் சிவலிங்கம் வைத்திருக்கிறார். இது வேறெந்த திருக்கோயில்களிலும் எங்கும் காணக் கிடைக்காத அற்புத ஞானக் கோலமாகும். தும்பிக்கையில் மோதகம் ஏந்தியும், இடது கரத்தை மடித்து கடிஹஸ்தமாக இடுப்பில் வைத்து பெருமிதக் கோலத்தில் இந்த கற்பக விநாயகர் காட்சி அளிக்கிறார்.

கற்பக விநாயகரின் முன்னே இடப்புறம் நான்கு சர விளக்குகளும், வலப்புறம் நான்கு சர விளக்குகளும், நடுவில் ஒரு சரவிளக்கும் என்று மொத்தம் 9 சர விளக்குகள் ஒளிவீசுகின்றன. நவக்கிரகங்களைக் குறிக்கும் இந்த சரவிளக்குகள் அமைந்திருப்பதால், கற்பக விநாயகரை வணங்கினால் நவகிரக தோஷங்கள் நீங்கும் என்று சொல்லப் படுகிறது.

இத்தல கற்பக விநாயகருக்கு தேசி விநாயகர் என்ற பெயரும் உண்டு. தேசி விநாயகர் என்ற பெயருக்கு ஒளிமிக்க, அழகுள்ள விநாயகர் என்று பொருள்

இந்த தேசி விநாயகருக்கு முன்னே 16 தீபங்கள் ஒரே நேர்கோட்டில் வரிசையாய் ஒளிவிடும் பாதவிளக்கும் அமைந்திருக்கிறது.

எனவே, இந்த கற்பக விநாயகரின் திருவடியில் விழுந்து வணங்கினால், 16 வகையான செல்வங்களுக்கும் அதிபதி ஆவது உறுதி என்பது பக்தர்கள் நம்பிக்கை.

ஆவணி மாதத்தில் வரும் விநாயகா் சதுா்த்தி விழாவே இந்தக் கோயிலின் முதன்மையான திருவிழா ஆகும். ஆண்டுதோறும் விநாயகா் சதுா்த்தி விழா மிகுந்த கோலாகலத்துடன் வெகு சிறப்பாக 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழாவின் 9 ஆம் நாள், தேர்த்திருவிழா சிறப்பாக கொண்டாடப் படுகிறது.

விநாயகர் சதுர்த்தி அன்று 18 படி ராக்ஷச கொழுக்கட்டை கற்பக விநாயகருக்கு நைவேத்தியமாக படைக்கப் படுகிறது. மேலும் மாதந்தோறும் வரும் சங்கடஹ சதுா்த்தியும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும், கற்பக விநாயகருக்கு முக்குறுணி மோதகம் படைத்து நன்றி செலுத்தி வழிபடுகிறார்கள்.

இத்தலத்தில் கணபதி ஹோமம் செய்து கற்பக விநாயகரை வழிபட்டால் தொழில் வளர்ச்சி அடையும் என்பதால் பக்தர்கள் இந்த கோயிலுக்கு வந்து கணபதி ஹோமம் செய்து வழிபடுகிறார்கள். மேலும் அருகம்புல் மாலை அணிவித்து வழிபாடு செய்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்துகிறார்கள்.

விநாயகர் சந்நிதிக்கு எதிர்ப்புறம் அமைந்த வடக்கு கோபுர வாயில் வழியாக சென்று வழிபட்டு முடித்துவிட்டு, கிழக்கு பக்கம் இருக்கும் ராஜகோபுர வாசல் வழியாக வெளியே வரவேண்டும் என்ற நியதி இக்கோயிலில் கடைப் பிடிக்கப் படுகிறது.

அள்ளி அள்ளித் தரக்கூடிய அருள் வள்ளல் இந்தக் கற்பக விநாயகரை நாமும் வணங்கி நலம் பெறுவோம்.

Tags: Pillaiyarpatti Karpaka Ganesha!
ShareTweetSendShare
Previous Post

டிக்கெட் பரிசோதகர் TO ஒலிம்பிக் பதக்க நாயகன்! : குசாலே சாதித்தது எப்படி?

Next Post

லடாக்கில் விண்வெளி நிலையம்!: நிலவுக்கு செல்லும் வீரர்களுக்கு பயிற்சி!

Related News

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

Load More

அண்மைச் செய்திகள்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

பெரம்பலூர் அருகே 9 குழந்தைகளை கடித்து குதறிய தெரு நாய்கள்!

நெல்லை பாஜக பூத் பொறுப்பாளர்கள் மாநாட்டில் நாற்காலிகளை வரிசையாக அடுக்கி வைத்த பாஜகவினர் – குவிகிறது பாராட்டு!

உதகை – மேட்டுப்பாளையம் சிறப்பு மலை ரயில் சேவை – இன்று முதல் தொடக்கம்!

தர்மஸ்தலா விவகாரத்தை வழிநடத்தியது யார்? – அண்ணாமலை அடுக்கடுக்கான கேள்வி!

வாலஜாபேட்டை அருகே பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து சாலையில் கவிழ்ந்து விபத்து!

தர்மஸ்தலா உடல்கள் புதைப்பு விவகாரம் – புகார் அளித்தவரை கைது செய்தது விசாரணைக்குழு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies