ஒலிம்பிக் ஹாக்கி போட்டி! இந்திய அணிக்கு எதிரான நடுவர்கள் முடிவால் சர்ச்சை!
Mar 21, 2026, 08:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒலிம்பிக் ஹாக்கி போட்டி! இந்திய அணிக்கு எதிரான நடுவர்கள் முடிவால் சர்ச்சை!

Murugesan M by Murugesan M
Aug 5, 2024, 09:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரிஸ் ஒலிம்பிக் ஹாக்கி காலிறுதி போட்டியில் இந்திய அணிக்கு எதிரான நடுவர்களின் முடிவு ஒருதலை பட்சமாக இருந்ததாக புகார் எழுந்துள்ளது. இது குறித்த செய்தித் தொகுப்பு ஒன்றை தற்போது பார்க்கலாம்..!

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஹாக்கி விளையாட்டு போட்டியில் பிரிட்டனை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி. ஒலிம்பிக் தொடர்களில் ஹாக்கி விளையாட்டில் இந்திய அணியின் ஆதிக்கம் எத்தகைய சாதனைகளை படைக்கச் செய்திருக்கிறது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஒரு சிறந்த அணியால் கடந்த கால பெருமைகளை தக்க வைத்துக்கொண்டு பயணிப்பது அவ்வளவு எளிதல்ல. காலம் மாறும், வரலாறுகள் திருத்தி எழுதப்படும். ஆனால் இந்திய ஹாக்கி அணியானது, ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் வீர நடைப் போட்டு வருகிறது.

ஒலிம்பிக் போட்டி குரூப் சுற்றுகளில் நியூசிலாந்து, அயர்லாந்து, ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டிகளில் வெற்றியும், அர்ஜென்டினா அணியுடனான போட்டியில் டிராவும் செய்தது இந்திய அணி. இதில் 1972 முனிச் ஒலிம்பிக் தொடருக்கு பிறகு, ஆஸ்திரேலியா அணியுடனான வெற்றி என்பது, வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியாக பார்க்கப்படுகிறது.

ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு முன்னேறிய இந்திய அணி, காலிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொண்டது. இந்த தொடரில் மீண்டும் ஒரு சூப்பர் ஹிட் போட்டியை ரசிகர்களின் கண்களுக்கு இரு அணிகளும் விருந்தாக்கின. ஆட்டத்தின் இரண்டாவது காலிறுதி பாதியிலேயே எதிர்பாராத விதமாக இந்திய வீரர் அமித் செய்த பவுல் காரணமாக அவருக்கு அதிரடியாக ரெட் கார்டு வழங்கப்பட்டது.

அதிர்ச்சியில் உறைந்தது ரசிகர்கள் மட்டும் அல்ல, இந்திய அணியும் கூட… ஏணென்றால் ரெட் கார்டு வழங்கப்பட்டால் அந்த போட்டி முழுவதுமாக ரெட் கார்டு வாங்கிய வீரர் விளையாட இயலாது. அமித் வெளியேறிய மறு நொடியே 10 வீரர்களுடன் மட்டுமே களத்தில் போராடியது இந்தியா…

இருப்பினும் அந்த குவாட்டரிலேயே கிடைக்கப்பெற்ற பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி கேப்டன் ஹர்மன்பிரித் சிங் கோல் அடித்தார். ஆனால் கொஞ்ச நேரத்திலேயே இங்கிலாந்து அணியும் கிடைத்த வாய்ப்பை கோல் ஆக்கியது. 1-1 என்ற கோல் கணக்கிலேயே மீதம் இருந்த 2 குவாட்டர்களை இரு அணிகளும் நிறைவு செய்யவே போட்டி சமணில் முடிந்தது.

10 வீரர்களை கொண்டு போட்டியை டிரா செய்த இந்திய அணியை ரசிகர்கள் அனைவரும் வெகுவாக பாராட்டினர். குறிப்பாக இந்திய அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் இங்கிலாந்து அணியின் இரண்டு அட்டாக்குகளை சரியாக தடுத்ததன் மூலம், இந்தியாவுக்கு நல்ல வாய்ப்பாக இந்த போட்டி டிராவில் முடிந்தது. இறுதியாக பெனால்டி ஷூட்அவுட் முறையில் இந்தியா 4 கோல்கள் அடித்தது, ஆனால் இங்கிலாந்து முதல் இரண்டு வாய்ப்புகளை கோல் ஆக்கி, மீதம் இரண்டு வாய்ப்புகளை தவற விட்டது.

இதனால் அபார வெற்றி பெற்ற இந்தியா 1 கோல் கணக்கை சேர்த்து, 2-1 என்ற வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இங்கிலாந்து அணியுடனான போட்டி, தொடக்கம் முதலே பல சர்சைகளால் சூழப்பட்டது

இந்திய வீரர் அமித்துக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டது, இங்கிலாந்து வீரர்களுக்கு சாதகமாக பெனால்டி கார்னர் வாய்ப்பு வழங்கியது மற்றும் மூன்றாம் நடுவரின் முடிவுகளில் திருப்தி இல்லாமல் இருந்தது என பல சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில், இந்திய ஹாக்கி கூட்டமைப்பு, நடுவர்களின் முடிவுகளில் திருப்தி இல்லை எனவும், மூன்றாம் நடுவர் ரெட் கார்டு மீது எடுத்த முடிவு ஏற்கத்தக்கதல்ல எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது.

மேலும், பெனால்டி ஷூட் அவுட்டின் போது இங்கிலாந்து கோல் கீப்பரை பின் பகுதியில் இருந்து பயிற்சியாளர் வழி நடத்தியதாகவும், பெனால்டி ஷூட்டவுட்டின் போது கோல் கீப்பர் வீடியோ டேப்லெட் பயன்படுத்தியதாகவும் குற்றம்சாட்டப்பட்டு உள்ளனர். இனி வரும் போட்டிகளில் நடுவர்களின் தரம் சிறந்ததாக இருக்க வேண்டும் எனவும், ஒருதலை பட்சமாக செயல்பட கூடாது எனவும், சர்வதேச ஒலிம்பிக் கூட்டமைப்புக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது இந்தியா…

ஒலிம்பிக் தொடர்களில் பொதுவாகவே இந்திய ஹாக்கி அணி முடிசூடா மன்னர்களாக திகழ்ந்தவர்கள் தான்.

1928 முதல் 1956 வரை 6 தங்கம், 1960 இல் வெள்ளி, 1964இல் ஆம் 7 வது தங்கம், 1968 மற்றும் 1972 ஆகிய வருடங்களில் வெண்கலப் பதக்கம், 1980ல் 8வது தங்கம், 2020-ல் வெண்கலம் என வலுவான பயணத்தை யாரும் மறக்க முடியாது. இந்திய அணியின் கோல் கீப்பர் ஶ்ரீஜேஷ் இந்த ஆண்டுடன் ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனவே அவருக்கு தங்கப் பதக்கத்தை பரிசாக கொடுக்க ஒட்டுமொத்த இந்திய அணியும், ரசிகர்களும் காத்துக் கொண்டிருக்கின்றன. இனி அரையிறுதியில் அடுத்த அடி எடுத்து வைத்துள்ள இந்தியா, வெற்றி பெற்று 1980க்கு பிறகு இறுதிப் போட்டிக்கு சென்று 44 ஆண்டுகள் கழித்து தங்கம் வெல்லும் என்ற பெரும் எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. இந்திய அணியும் அதனை நிறைவேற்றும் என நம்புவோம்.

Tags: Olympic hockey tournament! Controversy over the referees' decision against the Indian team!
ShareTweetSendShare
Previous Post

ஒரு கொலை – ஒரு X பதிவு! – இன எதிர்ப்பு வன்முறை பற்றி எரியும் பிரிட்டன்!

Next Post

வங்கதேசத்தில் அதிரடி திருப்பம்! – பதவியை துறந்த ஷேக் ஹசீனா ஆட்சியை பிடித்த ராணுவம்!

Related News

ஆர்.எஸ்.எஸ். நிர்வாக அமைப்பில் மாற்றம் – மாநிலங்கள் நீக்கப்பட்டு கோட்டங்களாக பிரிப்பு!

பேச்சுவார்த்தை நடத்தலாம் : ஆனால் போர்நிறுத்தத்திற்கு வாய்ப்பு இல்லை – ட்ரம்ப்

கவிஞர் வைரமுத்துவுக்கு ஞானபீட விருது வழங்கும் முடிவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் – தமிழ் எழுத்தாளர்கள் வலியுறுத்தல்!

1 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு முழு ஆண்டு தேர்வு – அட்டவனை வெளியீடு!

டாக்டர் ராமதாஸ், சசிகலா கட்சிகள் இடையே கூட்டணி உடன்பாடு – 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாக பேட்டி!

விளாத்திகுளம் மாணவி கொலை வழக்கு – தர்ம முனீஸ்வரனுக்கு 14 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

என்டிஏ தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை – இன்று சென்னை வருகிறார் பியூஷ் கோயல்!

வளைகுடாவில் பற்றி எரியும் எரிவாயு வயல்கள்: எப்போது அணையும் அமெரிக்கா – ஈரான் போர் ? – சிறப்பு தொகுப்பு!

போர்க்களத்தில் AI செய்த சிறு பிழை : 165 பள்ளி மாணவர்கள் படுகொலையின் பின்னணி – சிறப்பு கட்டுரை!

புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி தொகுதி பங்கீடு – என்ஆர் காங். 16, பாஜகவுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு!

ஈரான் போரை இந்தியாவால் முடிவுக்கு கொண்டு வர முடியும் – மோகன் பாகவத்

மேற்காசிய போர் பதற்றம் – ஏற்றுமதியாளர்களுக்கு ரூ.497 கோடி மதிப்பில் காப்பீட்டு திட்டம்!

இந்தியாவின் மின் உற்பத்தி துறையில் முதலீடு – சர்வதேச முதலீட்டாளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மானாமதுரை இளைஞர் ஆகாஷ் மரண வழக்கு – சிபிசிஐடி போலீசார் விசாரணை!

பெண்களுக்கு பாலியல் தொல்லை – இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் நிர்வாகி மதூர் சத்யா கைது!

குற்றாலம் மெயின் அருவியில் சீரமைப்பு பணிகள் – பாதுகாப்பு வளைவு இடித்து அகற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies