பழி வாங்கும் நடவடிக்கையில் ஈடுபடாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்யாமல் திமுக அரசு நேர்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை சவுக்கு சங்கர் வழக்கில் நீதியரசர் எஸ்.எம். சுப்பிரமணியம் மிகத் தெளிவாக குறிப்பிட்டுள்ளதாக பாஜக மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.
“சமுதாயக் கேடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமேயன்றி, சமுதாய கேடுகளுக்கு எதிராக குரல் கொடுப்போருக்கு எதிராக அல்ல” என்று நீதியரசர் கூறியதை உணர்ந்து கொண்டால் சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்தை உடனே அரசு வாபஸ் பெற்று விடும் என அவர் கூறியுள்ளார்.
ஒருவேளை தீர்ப்பு அரசுக்கு எதிராக வந்தால், அந்த தீர்ப்பினால் மக்கள் அரசின் மீது நம்பிக்கை இழப்பார்கள் என்பதால், இனியாவது திமுக அரசு திருந்துமா? என்று நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.