மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே 6 நாட்களுக்கு பிறகு மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து உதகைக்கு நாள்தோறும் மலை ரயில் போக்குவரத்து இயக்கப்பட்டு வந்த நிலையில், கடந்த 1ஆம் தேதி ஹில்கிரோ ஆர்டர்லி பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமடைந்ததால் ரயில் போக்குவரத்து பாதியிலேயே நிறுத்தப்பட்டது.
ரயில் பாதையில் மரங்கள் மற்றும் மண் சரிந்து தண்டவாளங்கள் பெரிய அளவில் சேதமடைந்ததால் சீரமைப்பு பணிகளில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மேட்டுப்பாளையம் – குன்னூர் இடையே 6 நாட்களுக்கு பிறகு மீண்டும் மலை ரயில் சேவை தொடங்கியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.