இந்தியாவில் தற்காலிக அனுமதி ஷேக் ஹசீனா அடைக்கலம் லண்டனா? அமெரிக்கவா?
Aug 24, 2025, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் தற்காலிக அனுமதி ஷேக் ஹசீனா அடைக்கலம் லண்டனா? அமெரிக்கவா?

Web Desk by Web Desk
Aug 8, 2024, 09:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

15 ஆண்டுக் காலமாக ஆட்சியில் இருந்த நாட்டில் தமக்கு பாதுகாப்பில்லை என்று உணர்ந்ததும் வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா, சகோதரி ஷேக் ரிஹயனாவுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அவர் இந்தியாவிலேயே தங்க போகிறாரா ? அல்லது லண்டனுக்கு செல்கிறாரா ? எங்கே குடியேறுகிறார் ஷேக் ஹசீனா? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

ஒரு மாத காலத்துக்கும் மேலாக நடந்த தொடர் வன்முறை போராட்டங்களின் விளைவாக, வங்க தேச பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை நிர்ப்பந்ததால் ராஜினாமா செய்தார். பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் அடைந்திருக்கிறார்.

டெல்லிக்கு அருகில் ஹிண்டனில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் தரையிறங்கிய ஷேக் ஹசீனாவை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்து பேசிய நிலையில், தற்போது டெல்லியில் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தியாவில் தற்காலிகமாக ஷேக் ஹசீனா தங்கி இருப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ள நிலையில், (next) இந்தியாவில் நீண்ட காலம் தங்கமாட்டார் என்றும் அவர் லண்டனுக்குச் செல்ல இருக்கிறார் என்றும் வங்க தேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஷேக் ஹசீனாவுக்கு எப்போதும் உறுதுணையாக இருந்து வரும் அவரது சகோதரி ஷேக் ரெஹானா பிரிட்டிஷ் குடியுரிமை பெற்றவராவார்.

ஷேக் ரெஹானாவின் மகள் துலிப் சித்திக் இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். மேலும் அவர் , (next) தற்போதைய பிரதமர் கெயர் ஸ்டார்மரின் அரசில் இணை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். ஜூலை மாதம் நகர அமைச்சராக நியமிக்கப்பட்ட துலிப் சித்திக், நிதிச் சேவைத் துறையை மேற்பார்வையிடுகிறார், பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் நம்பிக்கையை துலிப் சித்திக் பெற்றிருக்கிறார் என்பதையே குறிக்கிறது.

இந்த குடும்ப தொடர்புகளே ஷேக் ஹசீனாவுக்கு இங்கிலாந்தில் பாதுகாப்பான மற்றும் அரசியல் ரீதியாக சாதகமான சூழலை வழங்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இது மட்டுமல்லாமல், பிரிட்டனின் சட்டம், அரசியல் துன்புறுத்தல்களை எதிர்கொள்ளும் தனிநபர்களைப் பாதுகாக்கும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. அவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்து அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பை வழங்குகிறது.

தற்போது அரசியல் கொந்தளிப்பால் வங்க தேசத்தில் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டில் பாதுகாப்பு இல்லை. (next) எனவே பிரிட்டன் புகலிடக் கொள்கைப்படி ஹசீனாவிற்கு லண்டனே நம்பிக்கைக்குரிய புகலிடமாக உள்ளது.

ஹசீனாவுக்கு இந்தியா நிரந்தர அடைக்கலம் தரும் நிலையில் அது , இந்திய- வங்க தேச உறவுகளில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தக் கூடும் . வங்க தேசத்தின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா தலையிடுவதாக குற்றச்சாட்டுகள் எழும். (next) எனவே தான், இந்தியா தற்காலிக புகலிடத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியுள்ளது.

தனது மகன் சஜீப் வாசேத் ஜாய் அமெரிக்காவில் வசித்தாலும், ஷேக் ஹசீனா அமெரிக்காவுக்குச் செல்வதற்கான வாய்ப்புக்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த காலங்களில் தனது அரசாங்கத்தை சீர்குலைக்க அமெரிக்கா முயற்சிப்பதாக ஷேக் ஹசீனா குற்றம்சாட்டியிருந்ததும், (next) ஷேக் ஹசீனா ஆட்சியில் மனித உரிமைகள் மீறப் பட்டுள்ளதாக அமெரிக்கா குற்றம் சாட்டியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில், தேச பாதுகாப்பு குறித்து ஆலோசனை மேற்கொள்ளப் பட்டது.

ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்திருப்பதால்,வங்க தேசத்தில் உள்ள இந்தியர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதற்கு இந்திய அரசு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

Tags: Temporary permit in India Sheikh Hasina refuge in London? American?
ShareTweetSendShare
Previous Post

ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற இந்திய ஹாக்கி அணி!

Next Post

அதிக பால் அருந்துவது காரணமா?: ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளும் ஹரியானா!

Related News

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

மின்வாரிய அதிகாரிகளின் அலட்சியமே பெண் துப்புறவு பணியாளர் உயிரிழப்புக்கு காரணம் – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ட்ரம்ப் முயற்சி தோல்வி எதிரொலி : உக்ரைன் மீது உக்கிரமாக தாக்குதல் நடத்தும் ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

பிரதமர் மோடியின் வழிகாட்டுதல் காரணமாகவே சந்திரயான் 3 திட்டம் வெற்றி பெற்றது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

தனியார் கட்டிடங்களில் அங்கன்வாடி மையங்கள் – குழந்தைகளின் பாதுகாப்புக்கு யார் பொறுப்பு? என அண்ணாமலை கேள்வி!

ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் பலியாகும் அப்பாவி உயிர்கள் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

விண்வெளித் துறையில் இந்தியாவின் முன்னேற்றம் சாதாரண குடிமக்களின் வாழ்க்கையை எளிதாக்குகிறது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies