அதிக பால் அருந்துவது காரணமா?: ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளும் ஹரியானா!
Aug 12, 2026, 04:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதிக பால் அருந்துவது காரணமா?: ஒலிம்பிக்கில் பதக்கங்களை அள்ளும் ஹரியானா!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய மக்கள்தொகையில் வெறும் 2 சதவீதம் மட்டுமே உள்ள ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்களே 30 சதவீத ஒலிம்பிக் பதக்கங்களைக் கைப்பற்றியுள்ளனர்.
அவர்களால் மட்டும் எப்படி சாதிக்க முடிகிறது ? ஹரியானாவில் மட்டும் எப்படி இத்தனை ஒலிம்பிக் சாதனையாளர்களை உருவாக்க முடிகிறது? என்பது பற்றி தற்போது பார்க்கலாம்.

1900ஆம் ஆண்டு முதல் ஒலிம்பிக்கில் இதுவரை 38க்கும் மேற்பட்ட பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

குறிப்பாக, ஒலிம்பிக் வரலாற்றில் இந்தியாவின் தனிநபர் பதக்கங்களில் 30 சதவீதத்துக்கும் அதிகமானவை ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களால் கைப்பற்றப்பட்டுள்ளன.

விவசாயம் மட்டுமே பிரதானமாக இருக்கும் ஹரியானா, இந்தியாவின் தடகள மையமாகவே திகழ்கிறது.

ஹரியானாவின் சோனேபட் மாவட்டத்தில் உள்ள கிராமங்கள், ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி குமார் தஹியா மற்றும் யோகேஷ்வர் தத் ஆகியோரை உருவாக்கி, சாம்பியன் மல்யுத்த வீரர்களை உருவாக்குவதில் பிரபலமானது.

2020ம் ஆண்டு டோக்கியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளுக்கு சென்ற 126 பேர் கொண்ட இந்திய குழுவில் ஹரியானாவில் இருந்து 31 பேரும், பஞ்சாபில் இருந்து 19 பேரும் இடம் பெற்றிருந்தனர்.

2020ம் ஆண்டு இந்தியாவின் ஒலிம்பிக் பொற்காலம் என்றால் மிகையில்லை. அதில், இந்தியாவுக்காக தனிநபர் பதக்கம் வரிசையில் தடகளத்தில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா, மல்யுத்தத்தில் வெள்ளி வென்ற ரவிகுமார் தஹியா மற்றும் மல்யுத்தத்தில் வெண்கலம் வென்ற பஜ்ரங் புனியா ஆகிய மூன்று பேரும் ஹரியானாவின் கிராமங்களில் இருந்து வந்தவர்கள். மேலும், வெண்கலம் வென்ற ஆண்கள் ஹாக்கி அணியில் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த நான்கு தனிநபர் வீரர்கள் இருந்தனர்.

ஒலிம்பிக் வரலாற்றில் 23 தனிப்பட்ட பதக்கங்களை இந்திய வீரர்கள் வென்றுள்ளனர். அவற்றில் ஹரியானாவைச் சேர்ந்த ஏழு வீரர்கள் 7 பதக்கங்களைக் கைப்பற்றி சாதனை புரிந்தனர்.

துப்பாக்கி சுடுதல், ஈட்டி எறிதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, வில் விளையாட்டு, ஹாக்கி , கோல்ஃப் என குறிப்பிட்ட இந்த விளையாட்டுக்களில் ஹரியானாவில் இருந்து மட்டும் ஒலிம்பிக் வீரர்கள் வந்த சாதனை செய்வதற்கான காரணங்கள் பல இருக்கின்றன.

ஹரியானா எல்லையில் அதன் புவியியல் இருப்பிடம் காரணமாக தொடர்ச்சியான ஆக்கிரமிப்பால் ஒரு கொந்தளிப்பான வரலாற்றைக் கொண்ட மாநிலமாக உள்ளது. எனவே, அந்த மாநில மக்களுக்கு இயல்பாகவே தனித்துவமான தற்காப்புப் பண்புகளான உடல் வலிமை மற்றும் விடாமுயற்சி அதிகமாக உள்ளது.

பெரும்பாலும் கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடும் ஹரியானா இளைஞர்கள், விவசாயம் மற்றும் விளையாட்டு பயிற்சிகளில் தான் அதிக நேரங்களை செலவிடுகிறார்கள்.

குறிப்பாக, ஹரியானா மாநில கிராமங்களில் மல்யுத்தம் காலங்காலமாக ஒரு பாரம்பரிய விளையாட்டாக இருந்து வருகிறது. ஹரியானாவில் உள்ள பெரும்பாலான கிராமங்களில் அதற்கான பயிற்சி கூடங்கள் உள்ளன. அந்த பயிற்சிக் கூடங்களில் சிறுவர், சிறுமிகள் மண் குழியில் பயிற்சி செய்கிறார்கள். மேலும் கிராமப்புற ஹரியானாவில், மல்யுத்தம் உடற்பயிற்சிக்கான ஒரு நல்ல விளையாட்டாகக் கருதப்படுகிறது.

ஹரியானாவின் மிகப்பெரிய மாவட்டமான பிவானி, மினி கியூபா என்றும் அழைக்கப்படுகிறது, ஏனெனில் விஜேந்தர் சிங், விகாஸ் யாதவ் போன்ற சில தரமான குத்துச்சண்டை வீரர்கள் இந்த மாவட்டத்தில் இருந்து தான் வந்துள்ளனர். பிவானியில், கிட்டத்தட்ட அனைத்து சிறுவர்களுக்கும் குத்துச் சண்டை விளையாட தெரியும் என்பது ஆச்சரியமான உண்மை.

இந்திய அரசு மட்டுமல்லாமல் , ஹரியானா மாநில அரசும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் நலத் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர்களுக்கு முறையே ரூ. 4 கோடி ரூபாயும் மற்றும் வெண்கலப் பதக்கம் வென்றவர்களுக்கு 2.5 கோடி ரூபாயும் ரொக்கப் பரிசாக வழங்கியது. மேலும் அரசு சார்பில் சலுகை விலையில் வீடுகள் வழங்கியுள்ளது. மேலும், மாநில அரசு பணிகளில் விளையாட்டு வீரர்களுக்கு முன்னுரிமை வழங்கப் படுகிறது.

மேலும் இந்தியாவின் ஒரே தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு 6 கோடி ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத் தக்கது.

நவீன வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இன்னும் எட்டி பார்க்காத, ஹரியானாவில் உள்ள பெரும்பாலான மக்கள் கிராமப்புறங்களில் தான் வாழ்கின்றனர்.

அரிசியை விட மாவில் பத்து மடங்கு ஆற்றல் உள்ளதாகவும் மாவை விட பாலில் பத்து மடங்கு அதிக ஆற்றல் உள்ளதாகவும் பாலை விட இறைச்சியில் எட்டு மடங்கு அதிகம் ஆற்றல் உள்ளதாகவும் மற்றும் இறைச்சியை விட நெய்யில் பத்து மடங்கு அதிக ஆற்றல் உள்ளதாகவும் அர்த்த சாஸ்திரத்தில் சாணக்கியன் சொன்னதை ஹரியானா மக்கள் கடைப்பிடிக்கிறார்கள் .

புரத சத்துக்கள் அதிகம் உள்ள உணவுகளையே ஹரியானா மக்கள் சாப்பிடுகிறார்கள். குறிப்பாக நிறைய தயிர், நெய் மற்றும் பால் சாப்பிடுகிறார்கள். வலுவான உடலமைப்புடன் ஒருவர் தடகளத்தில் பயிற்சி பெற்றிருந்தால், எந்த விளையாட்டிலும் சிறந்து விளங்குவது எளிதாகும்.

2024 ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க சென்ற 117 இந்திய வீரர்களில் 24 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது.

Tags: Drinking too much milk is the reason?: Haryana wins medals in Olympics!
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியாவில் தற்காலிக அனுமதி ஷேக் ஹசீனா அடைக்கலம் லண்டனா? அமெரிக்கவா?

Next Post

பாம்பன் மீனவர்கள் 33 பேர் கைது! : இலங்கை கடற்படை!

Related News

அடுத்த 15 நாட்களுக்கு தினமும் ஒரு டிஎம்சி நீர் திறக்க வேண்டு; கர்நாடகாவுக்கு உத்தரவு

குறையும் குழந்தை பிறப்பு : அதிகரிக்கும் முதியோர் ஜனத்தொகை : முடங்கும் ஐரோப்பிய பொருளாதாரம்? – சிறப்பு தொகுப்பு!

73 லட்சமா 73 ஆயிரமா? – பட்டா தொடர்பாக கேகேஎஸ்எஸ்ஆர், செங்கோட்டையன் விவாதம்!

தனியார் பங்களிப்புடன் அடையாறு கூவம் ஆறு தூர்வாரும் பணிகள் – அமைச்சர் ஆனந்த்

நீட் ரத்து இல்லையென்றால் பணம் படைத்தவர்களின் குழந்தைகள் தான் மருத்துவபடிப்பில் சேர முடியும் – பாஜக எம்எம்ஏ போஜராஜன்

இடமாற்றமும், நெஞ்சில் இருக்கும் புகைப்பட மாற்றமும் – ஓபிஎஸ், செங்கோட்டையன் காரசார விவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் நுழைவுத் தேர்வு – தமிழக மாணவர்கள் சாதனை!

ஈரான் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் – ட்ரம்ப் வலியுறுத்தல்!

இன்றைய தங்கம் விலை!

தஞ்சை அருகே கோயில் நிலத்தில் ஈ.வெ.ரா சிலை – ஆய்வு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

கருக்கலைப்புக்கு எதிரான பேரணியில் பங்கேற்ற சபாநாயகர் சட்டத்தின் காவலரா அல்லது மதத்தின் பிரதிநிதியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் மட்டும் No Delimitation நாடகம் ஏன்? : தயாநிதி மாறன் கேள்வி!

நவோதயா பள்ளிகளை அனுமதிக்க முடியாது – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பு!

சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியுள்ளள ரஷ்ய விண்வெளி வீரர்கள் – இந்திய மக்களுக்கு தந்திர தின வாழ்த்து!

அமலாக்கத்துறை கடிதம் எழுதியும், முந்தைய திமுக அரசு, முன்னாள் அமைச்சர் நேருவை பாதுகாத்தது – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

தமிழ்த்தாய் வாழ்த்து பாடல் ஒவ்வொருவரின் உணர்வில் கலந்துள்ளது – பாஜக எம்எல்ஏ போஜராஜன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies