முன்னாள் பிரதமர்கள் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்திக்கு பிறகு 11-வது முறையாக சுதந்திர தின உரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெறவுள்ளார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில்பாஜக கூட்டணி வெற்றி பெற்றதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகி உள்ளார். இதன் மூலம் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
மோடி தற்போது நேரு மற்றும் அவரது மகள் இந்திரா காந்திக்குபிறகு செங்கோட்டை கொத்தளத்தில் இருந்து 11-வது முறையாக சுதந்திர தினஉரையாற்றும் பிரதமர் என்ற பெருமையை வரும் 15-ம் தேதி பெறவுள்ளார்.
கடந்த 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை பிரதமர் மோடியின் சுதந்திர தின உரையின் சராசரி நேரம் 82 நிமிடங்களாகும். இது மற்ற பிரதமர்களை காட்டிலும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாள் பிரதமர் நேரு 17 முறையும், இந்திராகாந்தி 16 முறையும் சுதந்திர உரையாற்றியுள்ளனர்.