பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே முன்னாள் மாணவர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
வாலிகண்டபுரம் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, முன்னாள் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, சாதனை மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது.
பள்ளியின் முன்னாள் ஆசிரியரும், நல்லாசிரியர் விருது பெற்றவருமான ரெங்கசாமி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 30 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில், முன்னாள் மாணவர்கள் சார்பில் 13 லட்சம் ரூபாய் செலவில் மாணவர்களுக்கு கழிப்பிட வசதியும், கல்வி உபரகணங்களும் வழங்கப்பட்டன.
தொடர்ந்து முன்னாள் ஆசிரியர்களுக்கு கௌரவம் செய்தும், நடப்பாண்டு 10, 12ஆம் வகுப்பில் சாதனை புரிந்த பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடத்தியும் முன்னாள் மாணவர்கள் நெகழ்ச்சியை ஏற்படுத்தினர்.