ஈரோட்டில் விலை கடுமையாக சரிந்ததன் காரணமாக தக்காளியை வியாபாரிகள் கால்வாயில் கொட்டிச் சென்றனர்.
கடந்த ஒரு மாதமாக ஒரு கிலோ தக்காளி 50 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது தக்காளி விளைச்சல் அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக சந்தைகளுக்கு தக்காளியின் வரத்து அதிகரித்தது. எனவே விலை குறைந்ததால் நஷ்டத்தை சந்திப்பதாக தெரிவித்த வியாபாரிகள் எல்லைப்பாளையம் பகுதியில் உள்ள கால்வாய் ஒன்றில் தக்காளிகளை கொட்டிச் சென்றனர்.