கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! - விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - உச்சநீதிமன்றம்!
Mar 20, 2026, 12:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! – விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! – உச்சநீதிமன்றம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததை எண்ணி உச்சநீதிமன்றம் கவலைக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர்.

பெண் மருத்துவரின் மரணத்தை தற்கொலை என்று மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையில் கொலை என்று ஏன் பதிவு செய்யவில்லை என சாடினர்.

மருத்துவமனை இயக்குநர் எப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என வினவிய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களது பணியை தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.

மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை பாதுகாப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விஷயம் எனக்கூறிய நீதிபதிகள், மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

அந்த குழுவில், உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இடம்பெறுவார்கள் என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Kolkata woman doctor case! - Adjournment to the 22nd hearing! - The Supreme Court!
ShareTweetSendShare
Previous Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Next Post

ரூ.5,120 கோடி வருவாய் ஈட்டிய பிசிசிஐ!

Related News

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

Load More

அண்மைச் செய்திகள்

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies