கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! - விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! - உச்சநீதிமன்றம்!
Sep 12, 2025, 10:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா பெண் மருத்துவர் வழக்கு! – விசாரணை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு! – உச்சநீதிமன்றம்!

Web Desk by Web Desk
Aug 20, 2024, 01:54 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை கொலை வழக்கின் விசாரணை நிலை அறிக்கையை தாக்கல் செய்ய சிபிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நாடு முழுவதும் உள்ள மருத்துவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

பெண் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலை இல்லாததை எண்ணி உச்சநீதிமன்றம் கவலைக் கொள்வதாக தெரிவித்த நீதிபதிகள், பணியிடத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாவிட்டால் அரசியலமைப்பின் கீழ் சமத்துவம் என்பதற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பினர்.

பெண் மருத்துவரின் மரணத்தை தற்கொலை என்று மருத்துவமனை நிர்வாகம் மூடி மறைக்க முயன்றதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், முதல் தகவல் அறிக்கையில் கொலை என்று ஏன் பதிவு செய்யவில்லை என சாடினர்.

மருத்துவமனை இயக்குநர் எப்போது இந்த வழக்கில் சேர்க்கப்பட்டார் என வினவிய நீதிபதிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள் தங்களது பணியை தொடருமாறு கேட்டுக்கொண்டனர்.

மருத்துவர்கள் மற்றும் பெண் மருத்துவர்களை பாதுகாப்பது என்பது தேசிய நலன் சார்ந்த விஷயம் எனக்கூறிய நீதிபதிகள், மருத்துவர்கள் பாதுகாப்பு தொடர்பாக தேசிய அளவில் ஒரு குழு அமைக்கப்படும் என தெரிவித்தனர்.

அந்த குழுவில், உள்துறை மற்றும் சுகாதாரத்துறை செயலாளர்கள், தேசிய மருத்துவ ஆணைய தலைவர், தேசிய தேர்வாளர்கள் குழு தலைவர் மற்றும் மருத்துவ பேராசிரியர்கள் இடம்பெறுவார்கள் என நீதிபதிகள் அறிவித்தனர்.

மேலும், கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் கொலை வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Tags: Kolkata woman doctor case! - Adjournment to the 22nd hearing! - The Supreme Court!
ShareTweetSendShare
Previous Post

மேக வெடிப்பு காரணமாக வெளுத்து வாங்கிய கனமழை!

Next Post

ரூ.5,120 கோடி வருவாய் ஈட்டிய பிசிசிஐ!

Related News

கைகொடுக்கும் ஃபிரான்ஸ் : இந்தியாவில் தயாராகும் போர் விமான எஞ்சின்!

இந்து தேசமாகும் நேபாளம் : மீண்டும் மன்னராட்சி மலர வலுக்கும் ஆதரவு?

அந்நிய சக்திகளின் கட்டுப்பாட்டில் ராகுல் காந்தி? : வாக்கு திருட்டு விவகாரத்தில் ஆதாரம் வெளியிட்ட பாஜக!

பின்லாந்தில் வாழ ஆசையா? : உலகின் மிகவும் மகிழ்ச்சியான நாட்டில் பொன்னான வாய்ப்பு!

பிரேசில் முன்னாள் அதிபருக்கு 27 ஆண்டுகள் சிறை தண்டனை – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கண்டனம்!

இந்தியாவில் கல்வி பயின்றவர் இடைக்கால தலைவரா? – நேபாளத்தில் Gen-Z இளைஞர்களின் ஆதரவு பெற்ற குல்மான் கிஷங்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்காவை அதிரவைத்த சம்பவம் : ஒற்றை தோட்டாவில் ட்ரம்ப்பின் நண்பர் சுட்டுக்கொலை!

நேபாள மக்களின் குறையாத கோபம் : அடக்கி வாசிக்கும் ‘நெபோ கிட்ஸ்’!

முதியவரை காரை ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சி தலைவர் : முறைகேட்டை அம்பலப்படுத்தியால் தொடரும் கொடூரம்!

ஞான பாரதம் போட்டலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

எல்லா செயல்களிலும் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடித்து வருகிறேன் – அண்ணாமலை

இந்திய ஐடி துறைக்கு காத்திருக்கும் ஆபத்து : புதிய சட்டம் கொண்டு வருகிறது ட்ரம்ப் அரசு!

இணையத்தை கலக்கும் NANO BANANA ட்ரெண்ட்!

சார்லி கிர்க் படுகொலை ஏன்? – கொலையாளியின் வீடியோ ஆதாரம் வெளியீடு!

நேபாளத்தில் இந்திய பக்தர்கள் சென்ற பேருந்து மீது தாக்குதல்!

சிக்கிம் : கனமழை, நிலச்சரிவில் 4 பேர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies