கடந்த ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு கூடுதலாக 5 ஆயிரத்து 120 கோடி ரூபாய் வருவாய் கிடைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இது கடந்த 2022-ஆம் ஆண்டில் கிடைத்த 2 ஆயிரத்து 367 கோடி ரூபாயை காட்டிலும், 116 சதவீதம் அதிகம் என பிசிசிஐ அறிவித்துள்ளது. ஊடக உரிமை மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தம் வாயிலாக இந்த வருவாய் ஈட்டியதாக இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.