சிறைவாசம் அனுபவித்து வரும் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக வேந்தர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளார்.
ஆக்ஸ்போர்டு பல்கலை கழகத்தில் பயின்ற இம்ரான் கான் அரசியல், பொருளாதாரம் மற்றும் தத்துவவியல் பட்டம் பெற்றவர். அப்பல்கலை வேந்தராக உள்ள கிறிஸ் பாட்டன் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அந்த பதவிக்கு போட்டியிட இம்ரான் கான் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அவரது கட்சியை சேர்ந்தவரும், லண்டனில் வசிப்பவருமான சயீத் ஜல்பிகார் புகாரி மூலம் வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.இப்பல்கலை வேந்தரின் பதவிக்காலம் 10 ஆண்டுகள் என்பது குறிப்பிடத்தக்கது.