நேரடி பணி நியமனம் தொடர்பான விளம்பரத்தை ரத்து செய்து சமூகத்தின் நம்பிக்கையை பிரதமர் மோடி மீண்டும் வென்றதாக மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் புகழாரம் சூட்டியுள்ளார்.
பீகார் மாநிலம் பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நேரடி பணி நியமனம் தொடர்பாக பிரதமர் மோடியை சந்தித்து தனது கருத்தை முன்வைத்ததாக தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் காங்கிரஸை சாடிய சிராக் பாஸ்வான், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசிலும் நேரடி பணி நியமனம் செய்யப்பட்டதாகவும், ஆனால் தற்போது தான் முதன்முறையாக இந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதை போன்ற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்க முயன்றதாகவும் விமர்சித்தார்.