பிரதமர் மோடி 2 நாள் பயணமாக போலந்து நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
இந்தியா- போலந்து இடையே ராஜாங்க ரீதியிலான உறவு ஏற்பட்டு 70 ஆண்டுகளான நிலையில், பிரதமர் மோடி அந்நாட்டுக்கு செல்கிறார். இதையொட்டி டெல்லியில் இருந்து தனி விமானத்தில் அவர் போலந்து தலைநகர் வார்ஷாவுக்கு புறப்பட்டார்.
இன்றும் நாளையும் போலந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமர் மோடி, அந்நாட்டின் பிரதமர் மற்றும் அதிபரை சந்தித்து பேசுகிறார். 45 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பிரதமர் ஒருவர் போலந்துக்கு செல்வது இதுவே முதல்முறை என பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போலந்து பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்தவாறு உக்ரைனுக்கு பிரதமர் மோடி வரும் 23-ஆம் தேதி பயணம் மேற்கொள்வதாகவும், அந்நாட்டு அதிபர் ஜெலென்ஸ்கியை அவர் சந்தித்து பேசவுள்ளதாகவும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.