போலந்து நாட்டு பயணத்தை முடித்து கொண்டு பிரதமர் மோடி உக்ரைன் புறப்பட்டார்.
சுமார் 2 ஆண்டுகளாக ரஷ்யா – உக்ரைன் இடையே போர் நடந்து வருகிறது. பிரதமர் மோடி 3-வது தடவையாக ஆட்சிக்கு வந்த பிறகு சமீபத்தில் ரஷியாவுக்கு சென்றார்.
இதைத்தொடர்ந்து, போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகளுக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன்படி 2 நாள் பயணமாக போலந்து நாட்டு தலைநகர் வார்சாவிற்கு சென்ற அவர், இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த நிலையில், போலந்து பயணத்தை முடித்து கொண்டு போர்ஸ் ஒன் என்ற சொகுசு ரயிலில் உக்ரைனில் உள்ள கீவ் நகருக்கு பிரதமர் மோடி பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்த பயண நேரம் 10 மணி நேரம் என்பது குறிப்பிடத்தக்கது. அங்கே உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.