தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!
Jul 23, 2025, 09:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024-25 கல்வியாண்டில் தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 40 சதவீத நிதியாக 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு அதன் நிதி பங்கீட்டை நான்கு தவணையாக விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் கட்ட நிதி கடந்த ஜூன் மாதமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்காததாலும், அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததாலும், நிதியை விடுவிப்பதில் காலதாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அடுத்த மாதம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதுமட்டுமன்றி கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாக தற்போது நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் நிலவுவதால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மாநில அரசு ஒப்புக்கொண்டதை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: central governmenttamil nadu governmentNational Education PolicySamagra Siksha Abhiyanfiscal allocation
ShareTweetSendShare
Previous Post

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

Next Post

நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவர் கைது!

Related News

வலிமையான பாஸ்போர்ட் பட்டியல் : உலகளவில் 77வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்!

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies