தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!
Sep 12, 2026, 09:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாத தமிழக அரசு!

Murugesan M by Murugesan M
Aug 27, 2024, 01:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தேசிய கல்விக் கொள்கையின் நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் தமிழக அரசு அடம்பிடிப்பதால், சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ், முதல்கட்டமாக தமிழக அரசுக்கு விடுவிக்க வேண்டிய 573 கோடி ரூபாயை மத்திய அரசு நிறுத்தி வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ், 2024-25 கல்வியாண்டில் தமிழக அரசுக்கு 3 ஆயிரத்து 586 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதில் மத்திய அரசு சார்பில் 60 சதவீத நிதியாக 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயும், மாநில அரசு சார்பில் 40 சதவீத நிதியாக 1,434 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

மத்திய அரசு அதன் நிதி பங்கீட்டை நான்கு தவணையாக விடுவிப்பது வழக்கம். அந்த வகையில், இத்திட்டத்தின் முதல் கட்ட நிதி கடந்த ஜூன் மாதமே விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால், தேசிய கல்விக் கொள்கையின் அம்சங்களை தமிழக அரசு ஏற்காததாலும், அதில் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகளை பூர்த்தி செய்யாததாலும், நிதியை விடுவிப்பதில் காலதாமதம் நிலவுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்மூலம் அடுத்த மாதம் சமக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தின்கீழ் பயன்பெறும் 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு ஊதியம் கிடைப்பதில் சிக்கல் நிலவுகிறது.

இதுமட்டுமன்றி கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடஒதுக்கீட்டில் சேர்க்கை பெற்ற 6 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களும் நிதியுதவி பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக சமக்ரா சிக்ஷா அபியான் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த நிலையில், மாநில அரசின் அலட்சியம் காரணமாக தற்போது நிதி ஒதுக்கீட்டில் சுணக்கம் நிலவுவதால் மேற்கொண்டு திட்டத்தை முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் டெல்லியில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தின்போது
தேசிய கல்விக் கொள்கையை ஏற்காமல், தமிழகத்தில் பிஎம் ஸ்ரீ பள்ளிகளை நிறுவ மாநில அரசு ஒப்புக்கொண்டதை மத்திய அரசு நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

Tags: fiscal allocationcentral governmenttamil nadu governmentNational Education PolicySamagra Siksha Abhiyan
Share
Tweet
SendShare
Previous Post

திருமங்கலம் மெட்ரோ இரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதல் வாகனங்கள் நிறுத்தும் வசதி!

Next Post

நத்தம் அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து தொடர்பாக இருவர் கைது!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies