டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!
Aug 25, 2025, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!

Web Desk by Web Desk
Aug 28, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், ரஷ்யாவின் ஜுக்கர்பெர்க் என்று அழைக்கப்படும் 39 வயதான பாவெல் துரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாவெல் துரோவ் கைதுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. யார் இந்த பாவெல் துரோவ் ? அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன ? அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் யார் யார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சமூக வலைதளங்களில் WhatsApp, Instagram, TikTok மற்றும் WeChat போன்ற ஒரு செயலியாக டெலிகிராம் இருக்கிறது. தற்போது துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் செயலியை ரஷ்யாவை சேர்ந்த பாவல் துரோவ், தனது சகோதரர் நிகோலாய் உடன் சேர்ந்து 2013ம் ஆண்டு தொடங்கினார். டெலிகிராம் 900 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே துரோவ் தனது VKontakte என்ற சமூக வலைத்தளமும் வைத்திருந்தார். ரஷ்ய அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால் 2014-ம் ஆண்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பின்னர் VKontakte தளத்தை விற்றார்.

2018ம் ஆண்டில், டெலிகிராம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் துபாயில் குடியேறிய துரோவ், 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியுரிமை பெற்றார். ரஷ்யா-உக்ரைன் போர் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதில் டெலிகிராம் செயலி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது

மோசடி, போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதத்தை வாதத்தை ஊக்குவித்தல்,இணைய மிரட்டல், ஆபாசம் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக போன்ற குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி உடந்தையாக உள்ளது என்ற புகார்கள் எழுந்தன.

டெலிகிராம் செயலி 2000 பேர்கள் வரை ஒரு குழுவில் இருக்க அனுமதி அளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான குழுக்களை எளிதில் உருவாக்க அனுமதிக்கும் இந்த அம்சத்தின் காரணமாக டெலிகிராம் போதைக் கடத்தல் காரர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தவறான தகவல்களைப் பரப்ப உதவுகிறது என்று குற்றஞ்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதன் அடிப்படையில் , இப்போது பிரெஞ்சு காவல் துறையினர் பாவல் துரோவ்வை கைது செய்துள்ளனர். பாவல் துரோவ்வை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் #FreePavel என்ற ஹேஷ்டேக் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ‘மீம்ஸ்’களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிப்பதாகவும் . எக்ஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பதாகவும், எக்ஸ் பதிவுகளை ஆஸ்திரேலியா தணிக்கை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ள எலான் மஸ்க் வரும் 2030ம் ஆண்டில் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களைத் தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம் என்றும் குறிப்பிட்டு இது ஆபத்தான காலம் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும், சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவின் முன்னாள் NSA தொடர்பாளர் எட்வர்ட் ஸ்னோடென், பாவல் துரோவ் கைது, பேச்சு சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.

டெலிகிராம் செயலியை உலகம் முழுதும் 90 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமாக இந்தியாவில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Telegram president's arrest shocking background!
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு தொடங்குகிறது!

Next Post

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கிளை மேலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்!

Related News

முதல்முறையாக கடன் பெறுவோருக்கு சிபில் ஸ்கோர் கட்டாயமில்லை – நிதியமைச்சகம் விளக்கம்!

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்கி பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் – பிரதமர் மோடி

ஜம்மு காஷ்மீர், ஹரியானா, உத்தராகண்ட் மாநிலங்களில் தொடர் மழை – இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

மதுரை சுற்றுவட்டார பகுதிகளில் கொட்டி தீர்த்த மழை!

வடமேற்கு வங்கக்கடலில் இன்று உருவாகுகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

நோயாளி இல்லாமல் இபிஎஸ் கூட்டத்திற்குள் சென்ற ஆம்புலன்ஸ் – சரமாரி கேள்வி கேட்ட அதிமுகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

குறைந்த விலைக்கு கிடைக்கும் அனைத்து நாடுகளிடம் இருந்தும் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வோம் – இந்தியா திட்டவட்டம்!

அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவை இன்று முதல் தற்காலிகமாக நிறுத்தம் – மத்திய அரசு அறிவிப்பு!

மின்வாரிய அலட்சியத்தால் பறிபோன உயிர் : தாயை இழந்து தவிக்கும் குழந்தைகள்!

திருத்தணி அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிறுத்தம் – நோயாளிகள் அவதி!

ராணுவத்திற்கு வலிமை சேர்க்கவுள்ள ‘சுதர்ஷன் சக்ரா’: சிறப்பம்சங்கள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

சங்கரன்கோவில் அருகே விசாரணை என்ற பெயரில் இளைஞரின் காலை உடைத்த போலீசார் – தொடரும் அத்துமீறல்!

விண்வெளியில் தனி ஆய்வு மையம் : மாதிரி வடிவமைப்பை வெளியிட்ட இஸ்ரோ – சிறப்பு தொகுப்பு!

பட்டப்படிப்பில் பண்டைய வேத கணிதங்கள், பஞ்சாங்கம் உள்ளிட்ட படிப்புகளை அறிமுகப்படுத்தலாம் – யுஜிசி பரிந்துரை!

சபாநாயகர் பதவியின் கண்ணியத்தையும் மரியாதையையும் அதிகரிக்க சபாநாயகர்கள் பாடுபட வேண்டும் – அமித் ஷா

தென்பெண்ணையாற்றில் கழிவுநீர் கலக்கும் அவல நிலை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies