டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!
Mar 15, 2026, 03:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெலிகிராம் அதிபர் கைது அதிர வைக்கும் பின்னணி!

Murugesan M by Murugesan M
Aug 28, 2024, 12:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெலிகிராம் செயலியின் நிறுவனரும், ரஷ்யாவின் ஜுக்கர்பெர்க் என்று அழைக்கப்படும் 39 வயதான பாவெல் துரோவ், பிரான்ஸில் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாவெல் துரோவ் கைதுக்கு உலகம் முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. யார் இந்த பாவெல் துரோவ் ? அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் என்ன ? அவருக்கு ஆதரவாக நிற்பவர்கள் யார் யார் ? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

சமூக வலைதளங்களில் WhatsApp, Instagram, TikTok மற்றும் WeChat போன்ற ஒரு செயலியாக டெலிகிராம் இருக்கிறது. தற்போது துபாயை மையமாக கொண்டு இயங்கி வரும் டெலிகிராம் செயலியை ரஷ்யாவை சேர்ந்த பாவல் துரோவ், தனது சகோதரர் நிகோலாய் உடன் சேர்ந்து 2013ம் ஆண்டு தொடங்கினார். டெலிகிராம் 900 மில்லியனுக்கும் அதிகமான பயனர்களைப் பெற்றிருக்கிறது.

ஏற்கெனவே துரோவ் தனது VKontakte என்ற சமூக வலைத்தளமும் வைத்திருந்தார். ரஷ்ய அரசின் கோரிக்கைகளுக்கு இணங்க மறுத்ததால் 2014-ம் ஆண்டு ரஷ்யாவை விட்டு வெளியேறினார். பின்னர் VKontakte தளத்தை விற்றார்.

2018ம் ஆண்டில், டெலிகிராம் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டது. இருப்பினும், 2021 ஆம் ஆண்டு அந்த தடை நீக்கப்பட்டது. 2017ம் ஆண்டில் துபாயில் குடியேறிய துரோவ், 2021 ஆம் ஆண்டு பிரெஞ்சு குடியுரிமை பெற்றார். ரஷ்யா-உக்ரைன் போர் பற்றிய தகவல்களை பரிமாறிக்கொள்வதில் டெலிகிராம் செயலி ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது

மோசடி, போதைப்பொருள் கடத்தல், தீவிரவாதத்தை வாதத்தை ஊக்குவித்தல்,இணைய மிரட்டல், ஆபாசம் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் வகையில் பதிவுகள் வெளியிட உடந்தையாக போன்ற குற்றங்களுக்கு டெலிகிராம் செயலி உடந்தையாக உள்ளது என்ற புகார்கள் எழுந்தன.

டெலிகிராம் செயலி 2000 பேர்கள் வரை ஒரு குழுவில் இருக்க அனுமதி அளிக்கிறது. அதிக எண்ணிக்கையிலான குழுக்களை எளிதில் உருவாக்க அனுமதிக்கும் இந்த அம்சத்தின் காரணமாக டெலிகிராம் போதைக் கடத்தல் காரர்களுக்கும் தீவிரவாத குழுக்களுக்கும் தவறான தகவல்களைப் பரப்ப உதவுகிறது என்று குற்றஞ்சாட்டுக்கள் எழுந்த வண்ணம் உள்ளன.

இதன் அடிப்படையில் , இப்போது பிரெஞ்சு காவல் துறையினர் பாவல் துரோவ்வை கைது செய்துள்ளனர். பாவல் துரோவ்வை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், துரோவ் கைது செய்யப்பட்ட பிறகு, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் #FreePavel என்ற ஹேஷ்டேக் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் ‘மீம்ஸ்’களை தடை செய்ய அயர்லாந்து முயற்சிப்பதாகவும் . எக்ஸ் நிறுவனத்தை பிரேசில் நாட்டை விட்டு வெளியேற்ற நினைப்பதாகவும், எக்ஸ் பதிவுகளை ஆஸ்திரேலியா தணிக்கை செய்ய முயற்சிப்பதாகவும் கூறியுள்ள எலான் மஸ்க் வரும் 2030ம் ஆண்டில் ஐரோப்பாவில் மீம்ஸ் போடுபவர்களைத் தூக்கிலிடும் சூழல் கூட உருவாகலாம் என்றும் குறிப்பிட்டு இது ஆபத்தான காலம் எனவும் பதிவிட்டிருக்கிறார்.

மேலும் அமெரிக்க அரசியல்வாதியான ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர் தனது எக்ஸ் தளத்தில் துரோவ் கைது செய்யப்பட்டது தனி மனித சுதந்திரத்தை பாதிக்கிறது என்றும், சுதந்திரமான பேச்சுரிமையைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

இந்தியாவின் முன்னாள் NSA தொடர்பாளர் எட்வர்ட் ஸ்னோடென், பாவல் துரோவ் கைது, பேச்சு சுதந்திரம் மற்றும் அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதல் என்று கூறியுள்ளார்.

டெலிகிராம் செயலியை உலகம் முழுதும் 90 கோடி பேர் பயன்படுத்தி வருகிறார்கள். அதிகமாக இந்தியாவில் தான் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Telegram president's arrest shocking background!
ShareTweetSendShare
Previous Post

மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டி பாரிஸில் இன்றிரவு தொடங்குகிறது!

Next Post

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் குடும்ப திருமண நிகழ்ச்சிகளில் கிளை மேலாளர்கள் தவறாமல் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்க வேண்டும்!

Related News

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

Load More

அண்மைச் செய்திகள்

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies