தமிழக முதலமைச்சரின் துபாய் பயணத்தின் போது ஈர்க்கப்பட்ட முதலீடுகளை செயல்படுத்தும் முயற்சி தோல்வியடைந்துள்ளதாக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு, RTI மூலம் கிடைத்த தகவலில் உறுதியாகி உள்ளது. அதுகுறித்த ஒரு செய்தித்தொகுப்பை தற்போது காணலாம்…
தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை அதிகளவு கொண்டு வரதுக்காக அமெரிக்காவுக்கு சென்றுள்ள நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு இருக்கக் கூடிய பெரிய, பெரிய தொழில் நிறுவனங்களின் அதிபர்கள், புலம்பெயர் தமிழர்களை சந்தித்து தமிழ்நாட்டுக்கு தொழில் தொடங்க அழைப்பு விடுக்க இருக்குறதா சொல்லியிருக்காங்க.
தொழில் முதலீடுகளை கொண்டு வருகிறோம் என்று கூறி அடிக்கடி வெளிநாட்டுக்கு போற முதலமைச்சர், அங்க கையெழுத்தாகும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலமா எவ்வளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்கியிருக்காங்க ? அது மூலமா எத்தனை பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகியிருக்கு எனபதை வெளிப்படையாக சொல்றதில்லனு என குற்றம்சாட்டும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரி வருகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் கேக்குற கேள்விகளையும், அடுக்குற குற்றச்சாட்டுகளையும் கொஞ்சம் கூட கண்டுக்காத முதலமைச்சர், ஐக்கிய அமீரக நாடுகள், சிங்கப்பூர், ஜப்பான், ஸ்பெயின் வரிசையில அடுத்ததா அமெரிக்காவுக்கு கிளம்பி போயிருக்காரு. முதலமைச்சர் அடுத்தடுத்த வெளிநாட்டு பயணத்துல போடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்தும், தமிழ்நாட்டுல ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்தும் தமிழக அரசு எதுமே சொல்லாத நிலையில தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூல சில பிரத்யேக தகவல் நமக்கு கிடைத்துள்ளது.
2022 ல துபாய் பயணத்தின் போது 6,100 கோடி ரூபாய் மதிப்புல போடப்பட்ட 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ல மூனு மட்டும் தான் செயல்பாட்டுக்கு வந்திருக்கு. எஞ்சிய மூனு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தொடர்பாக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கல. அதாவது துபாய் பயணத்துல போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்ல 50 சதவிகிதம் முதலீடுகள் வரலங்குறது தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் வெளிய வந்துருக்கு.
முதலமைச்சரோடு வெளிநாட்டு பயணத்துல ஈர்க்கப்பட்ட முதலீடு மட்டும் தான் முழுசா வரலனு நினைச்சுர வேணாம். கடந்த ஜனவரி மாசம் சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுல போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்லயும் 50 சதவிகிதம் கூட செயல்பாட்டுக்கு வரவில்லை என்ற தகவலும் நமக்கு கிடைச்சுருக்கு. உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின் மூலமா புரிந்துணர்வு ஒப்பந்தப்பம் போடப்பட்ட 631 திட்டங்கள்ல இதுவரை 248 திட்டங்கள் மட்டுமே அதாவது 40 சதவிகிதம் மட்டுமே செயல்பாட்டுக்கு வந்துருக்கு.
இதனிடையே அமெரிக்காவுக்கு கிளம்பிப் போகும் போது ஏர்ப்போர்ட்ல செய்தியாளர்களை சந்திச்ச முதலமைச்சர், தமிழ்நாட்டுல ஈர்க்கப்பட்ட முதலீடுகள் மற்றும் அதனால உருவான வேலைவாய்ப்புகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுறது மரபு கிடையாதுனும், அத தொழில் நிறுவனங்கள் விரும்ப மாட்டாங்கனு விளக்கம் கொடுத்துருக்காரு.
ஆட்சிக்கு வந்த ஒரு சில மாதங்களுக்குள் கடந்த பத்தாண்டு அதிமுக ஆட்சிக்காலத்துல நிலவிய நிதிப்பற்றாக்குறை சம்பந்தமாக வெள்ளை அறிக்கையை விரிவா, விளக்கமா வெளியிட்ட திமுக அரசு, முதலீடுகள் பத்தியும், வேலைவாய்ப்புகள் பத்தியும் வெள்ளை அறிக்கை வெளியிட மறுக்குறது பலருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கு.
தமிழகத்துல முதலீடுகளை கொண்டு வரதுக்காக முதலமைச்சரோடு வெளிநாட்டு பயணம் அவசியமானது தான் என்றாலும், அதனால ஈர்க்கப்படுற முதலீடுகள் குறித்தும், அது மூலமா உருவாகுற வேலை வாய்ப்புகள் குறித்தும் தமிழக மக்கள் ஒவ்வொருவருக்கும் வெளிப்படையா தெரிவிக்க வேண்டியதும் அரசோட கடமை தான்…