தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மேஜர் தியான் சந்துக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி புகழாரம் சூட்டியுள்ளார்
தேசிய விளையாட்டுத் தினத்தையொட்டி மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி புகழ்மிக்க ஹாக்கி வீரர் மேஜர் தியான் சந்துக்கு தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், “தேசிய விளையாட்டு தின வாழ்த்துகள். இன்று மேஜர் தியான் சந்த் அவர்களுக்கு நாம் மரியாதை செலுத்துகிறோம். விளையாட்டுகளில் பேரார்வம் கொண்டிருப்பவர்களுக்கும், இந்தியாவுக்காக விளையாடுகின்ற அனைவருக்கும் பாராட்டுத் தெரிவிக்கும் தருணம் இது என தெரிவித்துள்ளார்.
மேலும் விளையாட்டுக்கு பேரார்வத்துடன் பங்களிப்பு செய்தவர்களையும், உலக அரங்கில் பெருமிதத்துடன் இந்தியாவை பிரதிநிதித்துவம் செய்த அனைவரையும் அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தை பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய இளைஞர்கள் ஒவ்வொருவரும் விளையாட்டில் ஆர்வம் கொண்டு பிரகாசிப்பதற்கான சூழலை உருவாக்க அனைத்து நிலைகளிலும் அரசு ஆதரவளிக்கும் என்றும் பிரதமர் மோடி கூறியுள்ளார்.