பிரதமரின் வளர்ந்த இந்தியா இலக்கை அடைய பாஜகவை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது :
இன்று அனைத்து பாஜக நலம் விரும்பிகள் மற்றும் பாஜக தொண்டர்களுக்கு மிக முக்கியமான நாள். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோர் பாஜக உறுப்பினர் சேர்க்கையை (‘சங்கதன் பர்வா, சதாஸ்யதா அபியான் 2024) அறிமுகப்படுத்துகின்றனர்.
உலகின் மிகப்பெரிய கட்சி பாஜக. எங்களைப் பொறுத்தவரை கட்சி என்பது வெறும் காகிதத்தில் உருவான நடைமுறை மட்டுமல்ல. கடந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் பல புரட்சிகரமான முடிவுகள் எடுக்கப்பட்டு ஒவ்வொரு துறையிலும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. .
பிரதமர் 140 கோடி மக்களுக்கு ‘விக்ஷித் பாரத்’ திட்டத்தை வழங்கியுள்ளார், இதை நிறைவேற்ற பாஜகவை வலுப்படுத்துவது முக்கியம்.
பாஜகவின் நலம் விரும்பிகள், இந்நாட்டு மக்கள் மற்றும் பாஜக தொண்டர்கள் அனைவரும் ,இணைந்து செயல்பட வேண்டும்ட என கேட்டுக்கொள்கிறேன் என அமித் ஷா கேட்டுக்கொண்டுள்ளார்.