திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்தார்.
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை நடைபெற்ற தோமாலை சேவையில் அவர் குடும்பத்துடன் கலந்து கொண்டார்.
அப்போது அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில், வேத பண்டிதர்கள் ஆசி வழங்கினர். எடப்பாடி பழனிசாமியுடன் தேவஸ்தான அறங்காவலர் குழுவின் முன்னாள் உறுப்பினர் குமரகுரு உடன் இருந்தார்.