புருனே பயணத்தில் சாதித்த பிரதமர் மோடி - சீனாவுக்கு செக் வைத்த இந்திய விண்வெளி அரசியல்!
Aug 22, 2025, 05:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புருனே பயணத்தில் சாதித்த பிரதமர் மோடி – சீனாவுக்கு செக் வைத்த இந்திய விண்வெளி அரசியல்!

Web Desk by Web Desk
Sep 7, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமர் மோடியின் புருனே பயணம், தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தி இருக்கிறது. இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கை மற்றும் இந்திய-பசிபிக் புவி சார் அரசியல் பார்வை புதிய வடிவம் பெற வழிவகை செய்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்.

சுமார் நான்கு லட்சத்து ஐம்பதாயிரம் மக்கள் தொகை கொண்ட தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறிய நாடு தான் புருனே. ஆனால் பெரிய பணக்கார நாடாக புருனே உள்ளது.

பரந்த எண்ணெய் மற்றும் எரிவாயு இருப்புக்களுக்கு பெயர் பெற்ற புருனே, உலகின் நீண்ட கால மன்னரான சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவால் ஆளப்படுகிறது.

போர்னியோ தீவில் அமைந்துள்ள புருனேவுக்கு வடக்கே தென் சீனக் கடல் மற்றும் தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கில் மலேசியா எல்லையாக உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, இந்திய-பசிபிக் மையத்தில் அமைந்துள்ள புருனே மிக முக்கியமான புவிசார் அரசியல் மற்றும் புவிசார் மையமாக இருக்கிறது.

சர்வதேச புவிசார் அரசியல், தன்னை ஒரு குழப்பமான பகுதியில் வைத்துள்ளது என்பதை புருனே புரிந்துகொள்கிறது என்றாலும் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகள் புருனேவில் தங்கள் ஆதிக்கத்தைச் செலுத்த முயற்சி செய்து வருகின்றன. இதையறிந்து, சீனாவுடனும் அமெரிக்காவுடனும் புருனே நல்லுறவையே இதுவரை பேணி வருகிறது.

இந்நிலையில் தான் பிரதமர் மோடி கடந்த வாரம் இரு நாட்கள் அரசு முறை பயணமாக புருனே நாட்டுக்குச் சென்றிருந்த நிலையில், அந்நாட்டின் சுல்தான் ஹாஜி ஹசனல் போல்கியாவை அவரது அரண்மனையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், கலாச்சாரம், பாதுகாப்பு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

பிரதமர் மோடியின் வரலாற்று சிறப்புமிக்க புருனே பயணம், இந்தியாவின் ‘ACT EAST’ கொள்கையில் ஒரு குறிப்பிடத்தக்க மைல் கல்லாக பார்க்கப் படுகிறது.

தென்கிழக்கு ஆசிய நாடுகளுடன் ஆழமான தொடர்புகளை வளர்ப்பதற்கும், பிராந்திய நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கும், சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்துக்கு மாற்றாக இந்தியாயை முன்நிறுத்துவதற்கும் பிரதமர் மோடியின் புருனே பயணம் வழியமைத்திருக்கிறது.

இந்தியாவின் கண்ணோட்டத்தில், விண்வெளித் துறை சார்ந்த விஷயங்களில் புருனே ஒரு அதிமுக்கியமான கூட்டாளியாக இருக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது.

2018ம் ஆண்டில், புருனேவுடன் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணை வாகனங்களுக்கான டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் தொலைத்தொடர்பு நிலையங்களின் செயல்பாட்டில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.

அதன் படி, இஸ்ரோ டிடிசி நிலையம் என்று அழைக்கப்படும் டெலிமெட்ரி, டிராக்கிங் மற்றும் கமாண்ட் நிலையத்தை புருனேவில் அமைத்துள்ளது. இது செயற்கைக்கோள்கள் மற்றும் கிழக்கு நோக்கி விண்ணில் ஏவப்படும் அனைத்தையும் கண்காணித்து வருகிறது. இப்போது இந்த ஒப்பந்தம் மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

புருனேவைத் தவிர மொரிஷியஸ் , ரஷ்யா , இந்தோனேசியா மற்றும் அண்டார்டிகா ஆகிய நாடுகளிலும் இஸ்ரோ கண்காணிப்பு நிலையங்களை அமைத்திருக்கிறது.

பூமத்திய ரேகைக்கு அருகில் இருப்பதால் விண்வெளி நிலையம் அமைப்பதற்கு ஏற்ற இடமாக புருனே அமைந்துள்ளது. இதனால்,புருனே புவிசார் சுற்றுப்பாதையில் செயற்கைக்கோள்களை ஏவுவதற்கும் கண்காணிப்பதற்கும் வசதியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

புருனேவின் விண்வெளி தொழில்நுட்பங்களில் இந்தியா முதலீடு செய்து வருகிறது, மேலும் இந்தியா தனது ஆக்ட் ஈஸ்ட்’ கொள்கையை விரிவுபடுத்துவதற்கும் விண்வெளியை அதிகளவில் இந்தியா பயன்படுத்தும் போகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: chinaBruneimodi brunei visitPM ModiIndia
ShareTweetSendShare
Previous Post

விநாயகர் சதுர்த்தி விழா – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து : 12 பேர் உயிரிழந்த சோகம்!

Related News

சீனாவுக்கு ஒரு நியாயம், இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

விரைவில் குறைந்த எடை கொண்ட உதகை மலை ரயில் – அதிகாரிகள் தகவல்!

தர்மஸ்தலா வழக்கில் புதிய திருப்பம் : சதித்திட்டம் தீட்டிய தமிழக காங்கிரஸ் எம்.பி?

உள்நாட்டு விமானப் போக்குவரத்து இலவசம் – சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து நடவடிக்கை!

நாடாளுமன்றத்தில் தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர் – அமைச்சர் கிரண் ரிஜிஜு

களியக்காவிளை புதிய பேருந்து நிலைய பணிகளை விரைவுப்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா – சிறப்பு கட்டுரை!

கச்சா எண்ணெய் இறக்குமதி தொடர்பான அமெரிக்காவின் குற்றச்சாட்டு – வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மறுப்பு!

உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் வருகை தமிழகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

விழுப்புரம் அருகே நீட் தேர்வில் வென்று மருத்துவ கனவை நனவாக்கிய மாணவி!

தமிழகம் பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றம்!

திருநெல்வேலியில் திரளும் தாமரைச் சொந்தங்களை சந்திக்க பேராவல் கொண்டுள்ளேன் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

மணல் கடத்தலை தடுத்த பெண் விஏஓ மீது வீடு புகுந்து தாக்குதல் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – வெளிமாநில தமிழ் பள்ளிகளுக்கு மீண்டும் பாட நூல்களை வழங்க நடவடிக்கை!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies