உத்தர பிரதேசத்தில் வேன் மீது பேருந்து மோதிய விபத்தில் நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆக்ரா- அலிகர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து முன்னால் சென்ற வேனை முந்த முயன்றபோது திடீரென இரு வாகனங்களும் ஒன்றுடன் ஒன்று மோதின. இந்த விபத்தில் சிக்கி நான்கு சிறுவர்கள் உள்பட 12 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சென்ற போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என உத்தர பிரதேச அரசு அறிவித்தது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்தனர்.