அதி நவீனமாகும் இந்திய ராணுவம் - பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு!
Jan 14, 2026, 10:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அதி நவீனமாகும் இந்திய ராணுவம் – பாதுகாப்பு தளவாட கொள்முதலுக்கு ரூ.1.44 லட்சம் கோடி ஒதுக்கீடு!

Murugesan M by Murugesan M
Sep 12, 2024, 09:25 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் தளவாடங்களை கொள்முதல் செய்ய பாதுகாப்புத் தளவாட கொள்முதல் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளது.  அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் தேசியப் பாதுகாப்பை வலிமைபடுத்துவதையும், தேசத்தின் பாதுகாப்பு திறன்களை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்தியக் கடற்படைக்கு 70,000 கோடி ரூபாய் மதிப்பில், புதிய ஏழு மேம்பட்ட போர்க்கப்பல்களைத் தயாரிக்கவும் மற்றும் ராணுவத்துக்கு 50,000 கோடி ரூபாய் மதிப்பில்,1,700 புதிய நவீன ரக பீரங்கிகள் தயாரிப்பது உள்ளிட்ட பல பாதுகாப்புத் திட்டங்களுக்கு அனுமதி அளிக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

இந்திய கடற்படையின் ப்ராஜெக்ட் 17 பிராவோ (Project 17 Bravo)என்ற திட்டம் மத்திய அரசின் பரிசீலனையில் உள்ள முக்கிய திட்டங்களில் ஒன்றாகும்.

ஏற்கெனவே ,Mazagon Dockyards Limited (MDL) என்ற நிறுவனம் நான்கு போர்க்கப்பல்களை உருவாக்கி வருகிறது. மற்றும் Garden Reach Shipbuilders and Engineers (GRSE) என்ற நிறுவனம் 3 போர்க் கப்பல்களை தயாரித்து வருகிறது.

இந்நிலையில், (Project 17 Bravo) ப்ராஜெக்ட் 17 பிராவோவுக்கான ஏலத்தில் MDL, GRSE, கோவா ஷிப்யார்ட் மற்றும் லார்சன் & டூப்ரோ உள்ளிட்ட வகை நான்கு கப்பல் கட்டும் நிறுவனங்கள் பங்கேற்கும் என்று கூறப்படுகிறது.

மேலும், பீரங்கிகள் மற்றும் காலாட்படை போர் வாகனங்கள் உட்பட ராணுவத்தின் கவச வாகனங்களை நவீனமயமாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்திய இராணுவம், கடந்த 10 ஆண்டுகளில் தனது கவசப் படைகளைக் குறிப்பிடத்தக்க வகையில் மேம்படுத்தி வருகிறது.

அந்த வரிசையில், இது வரை பயன்படுத்தி வந்த ரஷ்யாவின் T-72 பீரங்கிகளுக்குப் பதிலாக Future Ready Combat Vehicles (FRCVs) என்ற அழைக்கப் படும், அதிநவீன போர் வாகனங்களை வாங்குவதற்கு மத்தியஅரசு திட்டமிட்டுள்ளது.இதில் 60 சதவீதத்துக்கும் அதிகமானவை உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஏலத்தில் Bharat Forge (பாரத் ஃபோர்ஜ்) மற்றும் Larsen & Toubro (லார்சன் & டூப்ரோ) போன்ற நிறுவனங்கள் பங்கேற்க உள்ளதாக தெரிய வருகிறது. இந்தியாவுக்கு எதிராக சீனா பலவகையான நடவடிக்கைகளை பொருளாதார மற்றும் இராணுவ ரீதியிலும் முன்னெடுத்து வருகிறது.

சீனா தனது விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஆகிய நாட்டின் உள்கட்டமைப்பை இராணுவ பயன்பாடுகளுக்காக மேம்படுத்தியுள்ளது. மேலும் சீனா தனது கடல் ஆதிக்கத்தை அதிகரித்து வருகிறது.

இலங்கையில் உளவு மற்றும் ஆராய்ச்சிக் கப்பல்கள், மியான்மரின் கிரேட் கோகோ தீவில் ஒரு விமான ஓடுதளம் நிக்கோபார் தீவுகளில் கடற்படை மற்றும் விமானப்படை தளங்கள்,மாலத்தீவில் நீருக்கடியில் நிலப்பரப்பு மேப்பிங் செய்யும் உளவுக் கப்பல் என இந்தியாவைக் கண்காணிக்கும் முயற்சிகளில் சீனா இறங்கியுள்ளது

அரேபிய கடலில் இந்தியாவின் கடல் எல்லையோரத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சீனா மற்றும் பாகிஸ்தான் கடற்படைகளுக்கு இடையேயான கூட்டு ராணுவப்பயிற்சி நடைபெற உள்ளது.

இதனிடையே  சீனா தனது மக்கள் விடுதலை இராணுவக் கடற்படையின் (PLAN) இராணுவத் தளத்தை ஜிபூட்டியில், எரிபொருள் நிரப்பும் வசதியிலிருந்து பழுது பார்ப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கான மேம்படுத்தப்பட்ட உள்கட்டமைப்பாக மாற்றியுள்ளது.

இந்தப் பின்னணியில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் The Defence Acquisition Council’ கூட்டம் நடை பெற்றது. இந்த கூட்டத்தில் 1.44 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பாதுகாப்புத் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

Tags: Make in India' programstrengthening national securityprime minister modiDefense Procurement Councildefense equipmentRs 1.44 lakh crore
ShareTweetSendShare
Previous Post

ஓயாத போராட்டங்கள் ! : ஆட்டம் காணும் மம்தா அரசியல்?

Next Post

கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies