ஒகேனக்கல் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால், கடந்த ஒன்றாம் தேதி முதல் குளிக்க தடை விதிக்கப்பட்டது.
தற்போது நீர்வரத்து 12 ஆயிரம் கன அடியாக சரிந்ததால், சுற்றுலாப் பயணிகள் நீர்வீழ்ச்சி மற்றும் காவிரி கரையோரங்களில் குளிக்க மாவட்ட ஆட்சியர் சாந்தி அனுமதி வழங்கியுள்ளார்.
இதனால் ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.