பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பசுமை ஹைட்ரஜன் தொடர்பான சர்வதேச மாநாட்டின் 2வது கருத்தரங்கு கூட்டம் டெல்லியில் தொடங்கியது.
3 நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில் காணொலி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மோடி,
கடந்தாண்டு இந்தியாவில் நடைபெற்ற ஜி20 உச்சி மாநாட்டில் பசுமை ஹைட்ரஜனுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதாக தெரிவித்தார்.
ஹைட்ரஜன் பற்றிய உயர்மட்ட தன்னார்வக் கொள்கைகள் ஒருங்கிணைந்த பாதையை உருவாக்கும் என்றும், பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு தொடர்பாக நாம் எடுக்கும் முடிவுகள் நமது எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை தீர்மானிக்கும் எனவும் குறிப்பிட்டார்.
மேலும், பொது போக்குவரத்து மற்றும் நீர்வழிகளில் பசுமை ஹைட்ரஜன் பயன்பாடு குறித்து வல்லுநர்கள் ஆராய வேண்டும் என்றும், உலகம் முழுவதும் பசுமை ஆற்றல் மாற்றத்திற்கு பெரிதும் உதவும் எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.