கும்பகோணம் அருகே கொள்ளிடம் ஆற்று படுகையில் அரசு கையகப்படுத்தும் நிலங்களுக்கு அரசு வழிகாட்டி மதிப்பு உயர்த்தி வழங்கப்படும் என வருவாய்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஆதனூர் – குமாரமங்கலம் இடையே கொள்ளிடம் ஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பணையினால் அணைக்கரை அருகே 4 கிராமங்களில் சுமார் 65 ஏக்கர் படுகை பகுதியை அரசு கையகப்படுத்தியுள்ளது.
இதற்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கும்பகோணம் சார் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் வழிகாட்டி மதிப்பு உயர்த்தி வழங்கும் கோரிக்கை ஏற்கப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.