ஓணம் பண்டிகை வரலாறு - சிறப்பு கட்டுரை!
Mar 15, 2026, 09:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓணம் பண்டிகை வரலாறு – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 14, 2024, 09:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் சித்திரை திருவிழா போல கேரளாவில் ஓணம் திருவிழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகை எதற்காக கொண்டாடப் படுகிறது? ஓணத்தின் வரலாறு என்ன என்பது பற்றி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம் .

கேரளாவில் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணமாகும் . கேரளாவில் இவ்விழா அறுவடை திருவிழா, மழைப் பூக்களின் திருவிழா என்று அழைக்கப் படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் அஸ்தம் நட்சத்திரம் தொடங்கி திருவோணம் வரை 10 நாட்கள் ஓணம் திருவிழா நடைபெறுகிறது. இந்நாளில் மகாபலி சக்கரவர்த்தி கேரளாவுக்கு வருகை தரும் நாளாக போற்றப்படுகிறது.

ஈஸ்வரன் கோயில் கருவறையில் அணையும் நிலையில் இருந்த விளக்கின் திரியை, எலி ஒன்று தூண்டி விட்டு சென்றதால், விளக்கு பிரகாசமாக எரிய தொடங்கியது. அறியாமல் செய்த இந்த சிவப் புண்ணியத்தின் பலனாக அந்த எலியை மறுபிறப்பில் மகா பலி சக்கரவர்த்தியாக பிறக்க அருள்புரிந்தார் சிவபெருமான். மகாபலி சக்கரவர்த்தி, பிரகலாதனின் பேரன் என்பது குறிப்பிடத் தக்கது.

மகா சக்கர வர்த்தியாக பிறந்து மக்களுக்கு நேர்மையான ஆட்சி தந்த மகாபலியை மகா விஷ்ணு வாமன அவதாரம் எடுத்து ஆட்கொண்ட திருநாளே ஓணம் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது.

ஒரு ஆவணி மாதம், வளர்பிறை, துவாதசி திதியில் , வாமனனாக, சிறுவனாக, பாலகனாக, குள்ள வடிவில் வந்து, மகா பலி சக்கரவர்த்தியிடம் மூன்றடி மண் யாசகம் கேட்டு, பின் ஓங்கி உலகளந்த உத்தமனாக தோன்றி மகாவிஷ்ணு அருள் புரிந்தார். வாமன ஜெயந்தியே இன்றும் ஓணம் பண்டிகையாக கொண்டாடப் படுகிறது.

ஓணம் என்றாலே பூக்களம் தான் முதன்மை பெறுகிறது. மகாபலியை வரவேற்கும் விதமாக, பண்டிகை தொடங்கும் நாளிலிருந்து 10ம் நாள் வரை அழகுமிக்க வண்ணமயமான மலர்களைக் கொண்டு பூக்களம் அமைக்கப் படுகிறது.

வீட்டில் உள்ள ஆண்மகன் அத்திப் பூ பறித்து வர அந்தப் பூவை முதல் நாள் கோலத்தின் நடுவில் வைப்பார்கள். முதல் நாள் ஒரு வண்ணத்திலான பூக்களால் கோலம் போடப் படுகிறது.

பிறகு இரண்டாவது நாள் இரண்டு வண்ணங்களில் என தொடர்ந்து 10ம் நாள் 10 வண்ணங்களில் பூக்களைக் கொண்டு கோலம் நிறைவு செய்யப்படுகிறது.

ஆண்டின் தொடக்கம் என்பதால் கசவு எனப்படும் இளம் மஞ்சள் கலந்த வெள்ளை நிற ஆடையை உடுத்தி இந்த பண்டிகை கொண்டாடப் படுகிறது.

ஓணம் ஒரு அறுவடை திருவிழா என்பதால், வாழை இலையில் 25 க்கும் மேற்பட்ட காய்கறிகளுடன் 64 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு ஓணம் சத்யா என்ற விருந்து பரிமாறப்படுகிறது .

அறுசுவைகளில் கசப்பு தவிர மற்ற சுவைகளுடன் இந்த ஓணம் விருந்து, மகாபலியின் ஆட்சியின் செழிப்பை வெளிக்காட்டுவதாக அமைந்திருக்கிறது.

மலையாளத்தில் புலிகலி என்றால் ‘புலிகளின் விளையாட்டு’ என்று பொருள். கலைஞர்கள் தங்களை வேட்டையாடுபவர்களாகவும் புலிகளாகவும் மஞ்சள், கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் பூசி, உடுக்கை போன்ற சிலிர்ப்பூட்டும் இசையுடன் நடனமாடி ஓணம் திருவிழா கொண்டாடப் படுகிறது. ‘புலி வேட்டை’யை அடிப்படையாகக் கொண்ட இந்த நடனம் கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் மிகவும் பிரபலமானதாகும்.

ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பு வல்லம்களி எனப்படும் பாம்பு-படகு பந்தயம் ஆகும். ஆரன்முலா பார்த்தசாரதி கோயிலில்’ நடைபெறும் இந்த போட்டி உலக அளவில் பிரசித்தி பெற்றதாகும். இத்துடன் களரி,கயிறு இழுத்தல் போட்டிகளும் நடைபெறுவது வழக்கம்.

ஓணம் பண்டிகையின் இன்னொரு சிறப்பு யானை திருவிழா ஆகும்.10 நாள் திருவிழாவில் விலையுர்ந்த பொன் மணிகளால் ஆன கவசங்களாலும், பூத் தோரணங்களாலும் அலங்கரித்த யானைகள் திருவீதிகளில் வரிசையாக வலம் வருவது கண்கொள்ள காட்சியாகும்.

ஓணம் பண்டிகை அனைத்து சமுதாய மக்களையும் ஒன்றிணைத்து மகிழ்ச்சியுடனும் ஒற்றுமையுடனும் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த பண்டிகையை நலம் ஓணம் என்று போற்றப்படுகிறது.

Tags: Keralaonam festivalAshtam NakshatraEmperor Mahabali
ShareTweetSendShare
Previous Post

மெட்டாவில் ஸ்டேட்டஸ்களை லைக் செய்யும் புதிய அம்சம் அறிமுகம்!

Next Post

உக்கிரமடையும் உக்ரைன் போர் – ரஷ்யாவுக்கு அதிநவீன ஏவுகணைகளை வழங்கிய ஈரான்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies