தீ விபத்தில் குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை உயிரிழப்பு - கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!
Oct 7, 2025, 05:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தீ விபத்தில் குன்றக்குடி சண்முகநாதன் கோயில் யானை உயிரிழப்பு – கண்ணீர் அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்!

Web Desk by Web Desk
Sep 15, 2024, 12:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

குன்றக்குடி சண்முகநாதன் கோயில்  சுப்புலட்சுமி யானையின் உயிரிழப்பு பக்தர்களுக்கு ஈடுகட்ட இயலாத பேரிழப்பாக அமைந்துள்ளது. அளவற்ற அன்பைப் பெற்ற சுப்புலட்சுமிக்கு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் திருக்கோயிலுக்கு 1971ம் ஆண்டு காடப்ப செட்டியார் என்பவரால் சுப்புலட்சுமி என பெயர்கொண்ட இரண்டு வயது குட்டி யானை தானமாக வழங்கப்பட்டது.

கோயில் விழாக்கள் மற்றும் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் சுப்புலட்சுமி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் முருகனை வணங்கிவிட்டு சுப்புலட்சுமியிடம் ஆசிர்வாதம் பெறுவது வழக்கமாக இருந்து வந்துள்ளது.

பக்தர்களிடமும், பொதுமக்களிடமும் அன்பாக நடந்து கொள்ளும் சுப்புலட்சுமி யானை தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகையின் மேற்புறத்தில் தென்னங்கீற்றுகள் அமைக்கப்பட்டிருந்தன.

இரவு நேரத்தில் கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த விளக்கில் இருந்து பரவிய தீ கொட்டகை முழுவதும் பரவியதால் சுப்புலட்சுமி யானை உடல்கருகி உயிரிழந்தது. சுப்புலட்சுமியின் உயிரிழப்பு அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஈடுகட்ட முடியாத பேரிழப்பாக அமைந்திருக்கிறது.

அனைவரின் அன்பைப் பெற்ற சுப்புலட்சுமியின் உடலுக்கு பக்தர்களும், பொதுமக்களுக்கும் திரண்டு வந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். குன்றக்குடி பொன்னம்பலம் அடிகள் தலைமையில் கோவில் நிர்வாகத்தினர் சிறப்பு பூஜைகள் நடத்திய பின்பு, ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட சுப்புலட்சுமி யானை ஊராட்சிக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஆலய நிர்வாகத்தின் அலட்சியப் போக்கே சுப்புலட்சுமி உயிரிழப்புக்கு காரணம் என அப்பகுதி பக்தர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

முருகன் சன்னதிக்கு வரும்போதெல்லாம் கண்ணெதிரே நின்ற சுப்புலட்சுமி யானை இனி இல்லை என்பதை அப்பகுதி மக்களாலும், பக்தர்களாலும் ஏற்றுக் கொள்ள முடியாத அளவிற்கு துயரத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags: KaraikudiSubbulakshmi elephantKunrakkudy Shanmuganathan Templetributes to Subbulakshmi elephant
ShareTweetSendShare
Previous Post

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த முயன்ற மம்தாவின் முயற்சி மீண்டும் தோல்வி!

Next Post

ஓணம் பண்டிகை – மத்திய அமைச்சர் எல்.முருகன் வாழ்த்து!

Related News

பாகிஸ்தானுக்கு BYE : வெளியேறும் பன்னாட்டு நிறுவனங்கள் – அமெரிக்காவிடம் அடகு போகும் பாகிஸ்தான்!

பயங்கரவாதத்திற்கு கனடாவில் இருந்து நிதியுதவி – பின்னணியில் பாக். உளவு அமைப்பு!

உப்பு ஏரியை உரிமம் கொண்டாடும் இந்தியா – பாகிஸ்தான் : மீண்டும் பூதாகரமாக உருவெடுத்த சர் கிரீக் பிரச்னை!

அமெரிக்க அரசு முடக்கம் : இழுத்து மூடப்பட்ட NASA – நாசாவிலும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள்!

நஞ்சாக மாறிய இருமல் சிரப் : குழந்தைகள் பலி – விதிகளை கடுமையாக்க மத்திய அரசு உத்தரவு!

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

Load More

அண்மைச் செய்திகள்

காசாவில் போர் நிறுத்தம் : வெற்றி பெற்ற ட்ரம்ப் அமைதி திட்டம் – பிரதமர் மோடி பாராட்டு!

பிஞ்சு குழந்தைகளின் உயிரை குடித்த “கோல்ட்ரிப்” – தரமற்ற மருந்துக்கு தடை விதித்த தமிழகம், கேரளா!

அவமதிப்பா? நாடகமா? : குகேஷின் “கிங்”ஐ தூக்கி வீசிய அமெரிக்க வீரர்!

எவரெஸ்ட்டில் கடும் பனிப்புயல் : 1000 பேரின் கதி என்ன? – சவாலானது மீட்புப் பணி!

கேன்சர் அறிகுறிகளை முன்பே கண்டறியலாம் : அறிமுகமாகும் புதிய ரத்த பரிசோதனை!

கரூர் துயர சம்பவத்திற்கு நிர்வாகத் தோல்வி, தவறான மேலாண்மையே காரணம் – பாஜக எம்பிக்கள் குழு!

2 கட்டங்களாக நடைபெறும் பீகார் சட்டமன்றத் தேர்தல் : நவ.6, 11-ல் வாக்குப் பதிவு – நவ.14-ல் வாக்கு எண்ணிக்கை!

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தாதற்கு கண்டனம் : கருப்பு பேட்ஜ் அணிந்து பணிக்கு சென்ற தலைமைச் செயலக ஊழியர்கள்!

21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு பணியாளர் சங்கம் போராட்டம்!

நேபாளத்தில் நிலச்சரிவு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 52-ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies