குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நமோ பாரத் ரேபிட் என்ற மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத், புஜ் நகர் இடையே 2-ஆம் கட்ட மெட்ரோ வழித்தடத் திட்டம் நிறைவடைந்தது. இந்த மார்க்கத்தில் மெட்ரோ ரயில் சேவையயை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். நிகழ்ச்சியில் குஜராத் ஆளுநர் ஆச்சார்ய தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்த பிரதமர் மோடி, மாணவர்களுடன் கலந்துரையாடினார். நிகழ்ச்சியையொட்டி, அகமதாபாத்தில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.