நாட்டை துண்டாடிய முகமது அலி ஜின்னா போன்ற மனநிலையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இருப்பதாக மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமர்சித்தார்.
அமெரிக்காவில் டெக்சாஸில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, இந்தியாவுக்கு எதிரான கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்ற மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி, வர்ஜீனியாவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது இந்தியாவில் ரத்தக்களரி ஏற்பட ராகுல் காந்தி விரும்புவதாக அவர் குற்றம்சாட்டினார்.