பிரதமர் மோடி பிறந்த நாளை முன்னிட்டு மத்திய அமைச்சர் எல்.முருகன் ரத்த தானம் செய்தார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், பாரதப் பிரதமர் மோடி அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, பாரதிய ஜனதா கட்சி சார்பில் இந்தியா முழுவதும் சேவை வாரமாக கொண்டாடுகிறோம்.
அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், அவினாசியில் தமிழக பா.ஜ.க சார்பாக ஏற்பாடு செய்திருந்த ‘இரத்த தான’ முகாமை துவங்கி வைத்து, இரத்தம் தானம் செய்தேன். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் பலரும் இரத்த தானம் வழங்கினார்கள் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.