அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் சிக்கும் நபர்களின் வீடுகள் சட்டவிரோதமாக புல்டோஸர் மூலம் இடிக்கப்படுவதாக கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், வரும் அக்டோபர் 1-ஆம் தேதி வரை ஆக்கிரமிப்புக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில், நாட்டில் எந்தவொரு பகுதியிலும் கட்டடங்களை இடிக்கக் கூடாது என மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டனர்.
அதேசமயம் பொது சாலை, நடைபாதை உள்ளிட்ட இடங்களை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டடங்களுக்கு இந்த உத்தரவு பொருந்தாது என தெளிவுபடுத்திய நீதிபதிகள், வழக்கின் அடுத்தகட்ட விசாரணயை அக்டோபர் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.