உத்தரப்பிரதேசம் அருகே நிலக்கரி ஏற்றி சென்ற சரக்கு ரயிலின் 25 பெட்டிகள் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
உத்தரப்பிரதேச மாநிலம், பிருந்தாவனில் இருந்து சூரத்கார் மின்சார ஆலைக்கு நிலக்கரிகளை ஏற்றிக் கொண்டு சரக்கு ரயில் சென்று கொண்டிருந்தது.
மதுரா அருகே சென்ற போது சரக்கு ரயில் திடீரென விபத்தில் சிக்கிய நிலையில், ரயிலில் இணைக்கப்பட்டிருந்த 25 பெட்டிகள் தடம்புரண்டன.
இது குறித்து தகவலறிந்து சென்ற ரயில்வே ஊழியர்கள் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த வழித்தடத்தில் செல்லும் 3 ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மறு சீரமைப்பு பணிகளில் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.