விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் குடிபோதையில் காரை இயக்கிய நபர்களை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த கிரிதர யாதவ், தருண் உள்ளிட்ட 4 பேர், புதுச்சேரிக்கு காரில் சென்றுவிட்டு குடிபோதையில் மீண்டும் பெங்களூருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது திண்டிவனத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசாரை கண்டு அச்சமடைந்த 4 பேரும் வாகனத்தை வேகமாக இயக்கினர்.
கார் தாறுமாறாக ஓடுவதை கண்ட பொதுமக்கள் குடிபோதையில் வாகனம் இயக்கிய 4 பேருக்கு தர்ம அடி கொடுத்தனர். அப்போது இருவர் தப்பியோடிய நிலையில் 2 பேரை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.