ஹரியானா சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா வெளியிட்டார்.
ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தல் அக்டோபர் மாதம் 5-ஆம் தேதி நடைபெறவுள்ள நிலையில், ரோட்டக்கில் பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.
ஹரியானாவில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு மாதம் 2 ஆயிரத்து 100 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றும்,
வீடுகளுக்கான கேஸ் சிலிண்டர் விலை 500 ரூபாயாக குறைக்கப்படும் எனவும் தேர்தல் அறிக்கையில் பாஜக உறுதியளித்துள்ளது.
இதுதவிர ஆண்டுக்கு 2 லட்சம் அரசு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று உறுதியளித்துள்ள பாஜக, அக்னிபாத் திட்டத்தில் ராணுவத்திலிருந்து ஓய்வுபெறும் வீரர்களுக்கு மாநில அரசில் பணிவாய்ப்பு அளிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் வீட்டுவசதி திட்டம், இலவச மருத்துவ சிகிச்சை, தொழில்நகரங்கள், கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.