ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் மக்களுக்கான திட்டம் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: ஒரே நாடு, ஒரே தேர்தல் , இந்த முயற்சிக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக நல்ல திட்டம். ஏனென்றால் ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு காலத்தில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டே இருப்பதென்றால் மக்களுக்கான திட்டங்கள் கிடைப்பது சிரமமாக இருப்பது மட்டுமில்லாமல், நேரம் வீணாகிறது, வரிப்பணம் வீணாகிறது, இது நல்ல முயற்சி மக்களுக்கானது
முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் சட்ட வல்லுனர்கள், அரசியல்வாதிகள், கட்சிகள், தேர்தல் அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்டு ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள். ஒரேநாடு ஒரே தேர்தல் வரவேற்கத்தக்கது
தமிழகத்தை பொறுத்தமட்டில் முதலமைச்சர் வெளிநாடுகளுக்கு சென்று முதலீடுகளை ஈட்டி வருகிறேன் என சொல்லுகிறார். ஆனால் சாம்சங் நிறுவன ஊழியர்கள் பத்து நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த போராட்டத்திற்கு பின்னால் கம்யூனிஸ்டுகள் உள்ளதாக கூறப்படுகிறது.
பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று வருகிறது. தனியார் உணவகத்திற்கு தமிழக அரசின் சத்துணவு முட்டைகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. மகாவிஷ்ணு போல இந்த முட்டையை எடுத்துச் சென்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள். இதையெல்லாம் விட்டுவிட்டு வேண்டாதவற்றில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்
நடிகர் விஜய் தவறான பாதையில் போகவில்லை. பொதுவான பாதையில் சென்றால் நன்றாக இருக்கும் எனத்தான் கூறினேன். ஒற்றை சாயம் பூசிக்கொண்டு போக வேண்டாம் எனத்தான் கூறுகிறோம்..