துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட பெண்ணின் உடல் - கொலைக்கான காரணம் என்ன?
Jan 14, 2026, 03:49 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட பெண்ணின் உடல் – கொலைக்கான காரணம் என்ன?

Murugesan M by Murugesan M
Sep 19, 2024, 07:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சென்னை துரைப்பாக்கத்தில் பெண் ஒருவர் துண்டு துண்டாக வெட்டி சூட்கேஸில் வைத்து வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாலியல் தொழிலுக்கு வந்த பெண் கொலை செய்யப்பட்டது எப்படி ? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து சற்று விரிவாக பார்க்கலாம்.

மாதவரம் பொன்னியம்மேடு பகுதியைச் சேர்ந்த தீபா என்ற வெள்ளையம்மாள் கடந்த 17 ஆம் தேதி வேலைக்குச் செல்வதாக கூறிவிட்டு வீட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். வேலைக்குச் சென்ற தீபா மீண்டும் வீடு திரும்பாத நிலையில், தொலைபேசியில் இருந்த அப்ளிகேசன் மூலமாக ஆய்வு செய்ததில் துரைப்பாக்கம் அருகே அவர் இருப்பதாக கண்டறியப்பட்டது.

தீபாவை காணவில்லை என அவரது அண்ணன் துரைப்பாக்கம் காவல்நிலையத்தில் அளித்த புகார் மீதான விசாரணை நடைபெற்று வந்த நிலையில், குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் சந்தேகத்திற்கு இடமாக ரத்த கறைகளுடன் கிடந்த சூட்கேஸ் ஒன்று கிடைத்தது.

பொதுமக்களின் புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த சூட்கேஸை திறந்து பார்த்தபோது பெண் ஒருவரை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை உள்ளே வைத்திருப்பது தெரியவந்தது.

பெண்ணின் உடல் அடையாளங்களை வைத்து மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மாயமான மாதவரத்தைச் சேர்ந்த தீபா என்பது கண்டு பிடிக்கப்பட்டது.

சென்னை காவல்துறை தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி.சக்ரவர்த்தி, அடையாறு காவல் துணை ஆணையர் பொன்.கார்த்திக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் அதே பகுதியில் ஒருவர் சூட்கேஸ் கொண்டு செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன.

விசாரணையை தீவிரப்படுத்தியதில் துரைப்பாக்கம் பார்த்தசாரதி நகர் 4வது தெருவில் வசித்து வரும் மணிகண்டன் என்பது தெரியவந்ததால் அவரை காவல்துறையினர் கைது செய்தனர். மணிகண்டனிடம் நடைபெற்ற விசாரணையில் அவர் அளித்திருக்கும் வாக்குமூலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெருங்குடி பகுதியில் தனியார் கார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் மணிகண்டன், பாலியல் தொழிலில் ஈடுபட்டு வரும் தீபாவை தொலைபேசி மூலமாக அழைத்து தனிமையில் இருந்ததாக கூறப்படும் நிலையில், முன்பு பேசிய பணத்தை விட அதிகளவு பணம் கேட்ட தீபாவுடன் மணிகண்டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாய்த்தகராறு கைகலப்பாக மாறிய நிலையில், இந்த விவகாரத்தை வெளியில் சொல்லுவேன் எனக்கூறிய தீபாவை, மணிகண்டன் சுத்தியால் அடித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே  உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

என்ன செய்வதென்று புரியாத மணிகண்டன், தீபாவின் உடலை துண்டு துண்டாக வெட்டி, எலும்புகளை உடைத்து சூட்கேஸில் துணி வைப்பது போல மடித்து வைத்துள்ளார். பின்னர் குமரன் குடில் குடியிருப்பில் புதியதாக கட்டுமானப் பணி நடைபெறும் இடத்தின் அருகே அந்த சூட்கேஸை வீசி சென்றிருக்கிறார்.

அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட தீபாவின் உடலை மணிகண்டன் இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மக்கள் அதிகம் வசிக்கும் பகுதியான துரைப்பாக்கத்தில் சர்வசாதாரணமாக பெண்ணை கொலை செய்து விட்டு சூட்கேஸில் வைத்து வீசிச் சென்றிருப்பது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: Chennailady murderduraipakkamMadhavaramdeepa murder
ShareTweetSendShare
Previous Post

மத்திய அரசுக்கு எதிராக தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தாக்கல் செய்த சீராய்வு மனு – உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி!

Next Post

குடும்ப ஆட்சியால் ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் கல்வி, வேலை வாய்ப்பு பறிபோனது – பிரதமர் மோடி குற்றச்சாட்டு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies