ஜார்கண்டில் பாஜக மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் பெற்று பெரும்பான்மையுடன் தனித்து ஆட்சியமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஜார்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி, கிரிடிஹ் பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், கனிமவளங்கள் நிறைந்த ஜார்கண்ட் மாநிலத்திலிருந்து இளைஞர்கள் வேலை தேடி வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்வதாக வேதனை தெரிவித்தார்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ஜார்கண்ட் மாநில வளர்ச்சிக்காக 84 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறிய அமித் ஷா, பாஜக ஆட்சியில் இதுவரை 3 லட்சத்து 81 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.
எல்லையில் ஊடுருவல்காரர்களைத் தடுக்க தவறினால், சட்டவிரோதமாக குடியேறுபவர்களின் எண்ணிக்கை அடுத்த 30 ஆண்டுகளில் அதிகரிக்கும் என்றும் அமித் ஷா எச்சரித்தார்.