ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு - சிறப்பு கட்டுரை!
Jan 14, 2026, 04:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆண்டுக்கு ரூ. 10 கோடி வருமானம் ஈட்டும் இந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 21, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

10 கோடிக்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட இந்தியர்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளில் 63 சதவீதம் உயர்ந்துள்ளது. அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

இந்தியாவில் பணக்கார வர்க்கத்தின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் அதிகரித்து வருகிறது என்று சென்ட்ரம் நிறுவன ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டும் தனிநபர்களின் எண்ணிக்கை, 49 சதவீதம் வளர்ச்சியடைந்து, 58,200 ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவித்திருக்கும் அந்த அறிக்கை,10 கோடி ரூபாய்க்கு மேல் ஆண்டு வருமானம் கொண்ட தனிநபர்களின் எண்ணிக்கை, சுமார் 31,800 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மேலும்,ஆண்டுதோறும் 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் உயர்ந்துள்ளதாகவும், கிட்டத்தட்ட 1 மில்லியன் தனிநபர்கள் இந்த வருமான அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

2019ம் நிதியாண்டிலிருந்து 2024 ஆம் நிதியாண்டு வரை ஆண்டுக்கு, 10 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் மொத்த வருமானம், 121 சதவீதம் வளர்ச்சியடைந்து, 38 லட்சம் கோடியைத் தாண்டியிருக்கிறது.

ஆண்டுக்கு 5 கோடி ரூபாய்க்கு மேல் சம்பாதிக்கும் தனிநபர்களின் கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம்106 சதவீதமாக இருந்தது. மேலும், அவர்களின் மொத்த வருமானம் 40 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.  இதனிடையே  ஆண்டுக்கு 50 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்பவர்களின் கூட்டு வருமானம் 64 சதவீதம் அதிகரித்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 49 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது.

வருமானம் மற்றும் அதிக வருமானம் ஈட்டுபவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைந்திருந்தாலும், இந்தியாவில் 15 சதவீத நிதிச் செல்வம் மட்டுமே தொழில் ரீதியாக நிர்வகிக்கப்படுகிறது என்பதையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது.

​​இந்தியாவின் உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்கள் மற்றும் அல்ட்ரா உயர் நிகர மதிப்புள்ள தனிநபர்களின் செல்வத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைக் கணக்கிடும் போது, கடந்த ஆண்டு 1.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக இருந்த, அவர்களின் ஒருங்கிணைந்த நிதிச் சொத்துக்கள், அடுத்த 4 ஆண்டுகளுக்குள் 2.2 டிரில்லியன் அமெரிக்க டாலராக வளர்ச்சியடையும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இதன்படி, இந்தியாவில், பொதுமக்களுக்கான வெகுஜன வணிகச் சந்தைகளும், இரட்டை இலக்கங்களில் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: IndiaINDIANSannual income above Rs 10 croreCentrum research reportndividuals earning increase
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்காவில் புலம்பெயர் பணியாளர்களில் 14 % இந்தியர்கள் பணியாற்றுகின்றனர் – ஆய்வில் தகவல்!

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் – பார்வையாளர்களுடன் கலந்துரையாடிய கமலா ஹாரிஸ்!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies