விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் மவீடு வீடாக சென்று பாஜக உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.
விருதுநகர் பா.ஜ.க. மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட, மண்டல உறுப்பினர் சேர்க்கை கலந்தாய்வுக் கூட்டம் சாத்தூரில் நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், பாஜக அரசின் சாதனைகளை கூறினாலே பொதுமக்கள் தாமாக முன்வந்து உறுப்பினராக தங்களை இணைத்துக் கொள்வர் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் உள்ள செக்கடி தெருவிற்கு சென்ற அமைச்சர் எல்.முருகனுக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் பொதுமக்கள் பலரின் வேண்டுகோளின் பேரில், அவர்களை பாஜக உறுப்பினர்களாக பதிவு செய்தார். இந்நிகழ்ச்சியில் பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.