பாகிஸ்தான் உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்டவே இந்தியா விரும்புவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவைத் தேர்தலையொட்டி ரஜெளரியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர், அமைதியாக வாழ வேண்டுமென்றால் அண்டை நாடுகளுடன் நட்பு பாராட்ட வேண்டும் என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுவதாக கூறினார்.
பாகிஸ்தான் உள்பட அண்டை நாடுகளுடன் இந்தியா நட்பு பாராட்ட விரும்பினாலும், அவர்கள் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாக அமைச்சர் ராஜ்நாத் சிங் குற்றஞ்சாட்டினார்.
இந்திய மண்ணில் பயங்கரவாத தாக்குதல் நடத்த மாட்டோம் என பாகிஸ்தான் உறுதியளித்தால், அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உறுதிப்பட தெரிவித்தார்.