800 கிலோ நவதானியங்களை கொண்டு பிரதமர் மோடியின் உருவத்தை வரைந்த பிரெஸ்லி ஷெகினாவை மத்திய அமைச்சர் எல்.முருகன் நேரில் சந்தித்து பாராட்டு தெரித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது :சென்னை வேலம்மாள் போதி வளாகம் பள்ளியில் பயின்று வரக்கூடிய மாணவி பிரெஸ்லி ஷெகினா அவர்கள், பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பிறந்தநாளன்று, 800 கிலோ நவதானியங்களைக் கொண்டு பாரத பிரதமர் அவர்களின் உருவப்படத்தை ஓவியமாக வரைந்து அனைவரது நம் பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.
மாணவி பிரெஸ்லி ஷெகினாவை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன். இந்தியாவின் நம்பிக்கைத் தூணாக விளங்கி வருகின்ற இளைஞர்களின் நலனில், பெரிதும் கவனம் செலுத்தி வரும் நமது பாரதப் பிரதமரின் மீது கொண்ட ஈர்ப்பால்,
இதுபோன்ற சாதனை ஓவியம் வரைந்துள்ள மாணவி பிரெஸ்லி ஷெகினா, வரும் காலங்களில் தனது தனித் திறமையின் மூலம் வாழ்வின் பெரிய உச்சங்களைத் தொட வேண்டுமென்று வாழ்த்தி மகிழ்கிறேன் என எல்.முருகன் தெரிவித்துள்ளார்.