4 முறை வெளிநாட்டு சுற்றுப்பயணம் மேற்கொண்டு குறைவான முதலீட்டை ஈர்த்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின் உடனடியாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2019ல் நடந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு வந்தவர்களை அப்போதைய எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கேலி பேசியதாகவும், அதிமுக ஆட்சியில் மேற்கொண்ட ஒப்பந்த புள்ளி விவரங்கள் அனைத்தும், அரசு கோப்பில் உள்ளதாக எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சியில் பணியாற்றிய இரண்டு அதிகாரிகளை கேட்டிருந்தால், முதலமைச்சர் மனம்போன போக்கில் பேட்டியளித்திருக்கமாட்டார் என சாடியுள்ள அவர், முதலமைச்சரின் செயல்பாடு பூஜ்யம் என்பதால்தான் வெள்ளை அறிக்கையை வெளியிட மறுக்கிறார் எனவும் குற்றம்சாட்டினார்.
மேலும், வார்த்தை ஜாலம் மூலம் அனைவரையும் ஏமாற்றிவிடலாம்
என்ற கற்பனையில் முதலமைச்சர் மிதக்கிறார் என்றும் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.