உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK - சிறப்பு கட்டுரை!
Nov 3, 2025, 09:31 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK – சிறப்பு கட்டுரை!

Web Desk by Web Desk
Sep 23, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான CYBER ATTACK-ஐப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2009ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் பங்கேற்பதற்காகச் சென்ற பெண் ஒருவர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றது அமெரிக்க உளவு நிறுவனமான CIA. அதற்காக இஸ்ரேலின் MOSSAD-உடன் இணைந்து Stuxnet என்ற வைரஸை உருவாக்கியது. அதுவே உலகின் முதல் DIGITAL ஆயுதம் எனக் கருதப்படுகிறது.

இரண்டாயிரமாம் ஆண்டில் இருந்தே Stuxnet வைரஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த OPERATION-க்கு ‘OLYMPIC GAMES’ என்று பெயர் வைத்திருந்தன. முந்தைய வைரஸ்களைப்போல் அல்லாமல் புதுவிதமாக உருவாக்கப்பட்டது Stuxnet. தொழிற்சாலைகளில் உள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக நடான்ஸ் அணுசக்தி மையத்தில் யூரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படும் மைய விலக்கு சுழற்சிக் கருவியை ATTACK செய்வதே Stuxnet வைரஸின் முக்கியப் பணி.

நடான்ஸ் அணுசக்தி மையத்துக்கும் வெளி உலகுக்கும் இணைய தொடர்பு கிடையாது என்பதால் PEN DRIVE மூலம் முதல் CYBER ATTACK நடத்தப்பட்டது. ஆனால் FIRST VERSION என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அதைவிட பயங்கரமான மோசமான VERSION-ஐ CIA-வும் MOSSAD-ம் உருவாக்கின.

ஒரு கறுப்பு ஆடு மூலம் UPDATED Stuxnet MALWARE, நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள் அனுப்பப்பட்டது. இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது Stuxnet வைரஸ். நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள்ளும் ஈரானின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இன்னும் சொல்லப்போனால் ஈரானைத் தாண்டி பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Stuxnet வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவிய போதும் OPERATION நிறுத்தப்படவில்லை. சைபர் தாக்குதல் குறித்து ஈரானுக்குத் தெரியாது என்பதால் அதைத் தொடர்ந்து நடத்தின CIA-வும் MOSSAD-ம். ஒருகட்டத்தில் இந்த விஷயம் ஈரான் அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பை அதிகரிக்கத் தொடங்கியது அந்நாட்டு அரசு.

நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்த ஏழாயிரம் மைய விலக்கு சுழற்சி கருவிகளில் ஆயிரம் கருவிகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தாவிட்டாலும் ஈரானின் அணு ஆய்வில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியது. யுரேனியம் செறிவூட்டலை பாதியில் நிறுத்திவிட்டு பாதிப்புக்குள்ளான கருவிகளை மாற்றும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது.

இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் 80 ஆயிரம் கணினிகளை Stuxnet ATTACK செய்ததாகவும் அதனால் முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள், மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத காலத்திலேயே இவ்வளவு வேலைகளை பார்த்த MOSSAD, தற்போதைய TECH யுகத்தில் PAGER வெடிப்பை நிகழ்த்தியதில் ஒன்றும் வியப்பில்லை அல்லவா?

Tags: CYBER ATTACKCIApager attackamericaLebanonIranMOSSAD
ShareTweetSendShare
Previous Post

பதிலடிக்கு தயாராகும் ஹிஸ்புல்லா – பேஜருக்குள் வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

ஆப்கனில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் – 7 பேர் பலி!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் முன்னேற்றம் அடைந்து வருகிறது – இஸ்ரோ தலைவர் நாராயணன்

சனாதனத்தை டெங்கு, மலேரியா என தாழ்த்தி பேசினாலும் அழிக்க முடியாது – ஆளுநர் ஆர்.என்.ரவி உறுதி!

தருமபுரம் ஆதீன மடாதிபதி மணிவிழா மாநாடு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு!

தமிழகத்தில் நாளை முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி!

நாட்டுக்கு பெருமை சேர்த்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி – அண்ணாமலை வாழ்த்து!

Load More

அண்மைச் செய்திகள்

பாரத தேச வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய நாள் – இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு நயினார் வாழ்த்து!

வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட MS-03 தகவல் தொடர்பு செயற்கைக்கோள் – பிரதமர் மோடி வாழ்த்து!

விண்வெளித்துறையில் “பாகுபலி மொமன்ட்” – CMS-03 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தம் – சிறப்பு தொகுப்பு!

மகளிர் உலகக்கோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணி – பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, எல்.முருகன் உள்ளிட்டோர் வாழ்த்து!

ஷபாலி வர்மா, தீப்தி சர்மா அபாரம் – உலகக்கோப்பையை கைப்பற்றியது இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

குண்டு வேண்டாம்… துப்பாக்கி வேண்டாம்… வால்வு ஒன்று போதும்… : இந்தியாவின் கையில் பாகிஸ்தானின் மரணக் கயிறு? – ஆஸி.,யின் ஷாக் ரிப்போர்ட்!

மகனை பிரதமராக்கும் சோனியாவின் கனவு ஈடேறாது – மத்திய அமைச்சர் அமித் ஷா உறுதி!

தனிமனித வளர்ச்சி மூலம் தேசத்தை கட்டமைக்கும் பாதையில் பதஞ்சலி பல்கலைக்கழகம் – குடியரசு தலைவர் பாராட்டு!

கொள்முதலில் தொடரும் குளறுபடி : சாலைகளில் வீணாகும் நெல்மணிகள்!

உயிர் பயத்துடன் வாழும் மக்கள் : வாழ தகுதியற்ற குடிசை மாற்று வாரிய குடியிருப்புகள் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies