உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK - சிறப்பு கட்டுரை!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 08:00 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான CYBER ATTACK-ஐப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2009ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் பங்கேற்பதற்காகச் சென்ற பெண் ஒருவர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றது அமெரிக்க உளவு நிறுவனமான CIA. அதற்காக இஸ்ரேலின் MOSSAD-உடன் இணைந்து Stuxnet என்ற வைரஸை உருவாக்கியது. அதுவே உலகின் முதல் DIGITAL ஆயுதம் எனக் கருதப்படுகிறது.

இரண்டாயிரமாம் ஆண்டில் இருந்தே Stuxnet வைரஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த OPERATION-க்கு ‘OLYMPIC GAMES’ என்று பெயர் வைத்திருந்தன. முந்தைய வைரஸ்களைப்போல் அல்லாமல் புதுவிதமாக உருவாக்கப்பட்டது Stuxnet. தொழிற்சாலைகளில் உள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக நடான்ஸ் அணுசக்தி மையத்தில் யூரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படும் மைய விலக்கு சுழற்சிக் கருவியை ATTACK செய்வதே Stuxnet வைரஸின் முக்கியப் பணி.

நடான்ஸ் அணுசக்தி மையத்துக்கும் வெளி உலகுக்கும் இணைய தொடர்பு கிடையாது என்பதால் PEN DRIVE மூலம் முதல் CYBER ATTACK நடத்தப்பட்டது. ஆனால் FIRST VERSION என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அதைவிட பயங்கரமான மோசமான VERSION-ஐ CIA-வும் MOSSAD-ம் உருவாக்கின.

ஒரு கறுப்பு ஆடு மூலம் UPDATED Stuxnet MALWARE, நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள் அனுப்பப்பட்டது. இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது Stuxnet வைரஸ். நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள்ளும் ஈரானின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இன்னும் சொல்லப்போனால் ஈரானைத் தாண்டி பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Stuxnet வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவிய போதும் OPERATION நிறுத்தப்படவில்லை. சைபர் தாக்குதல் குறித்து ஈரானுக்குத் தெரியாது என்பதால் அதைத் தொடர்ந்து நடத்தின CIA-வும் MOSSAD-ம். ஒருகட்டத்தில் இந்த விஷயம் ஈரான் அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பை அதிகரிக்கத் தொடங்கியது அந்நாட்டு அரசு.

நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்த ஏழாயிரம் மைய விலக்கு சுழற்சி கருவிகளில் ஆயிரம் கருவிகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தாவிட்டாலும் ஈரானின் அணு ஆய்வில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியது. யுரேனியம் செறிவூட்டலை பாதியில் நிறுத்திவிட்டு பாதிப்புக்குள்ளான கருவிகளை மாற்றும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது.

இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் 80 ஆயிரம் கணினிகளை Stuxnet ATTACK செய்ததாகவும் அதனால் முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள், மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத காலத்திலேயே இவ்வளவு வேலைகளை பார்த்த MOSSAD, தற்போதைய TECH யுகத்தில் PAGER வெடிப்பை நிகழ்த்தியதில் ஒன்றும் வியப்பில்லை அல்லவா?

Tags: CYBER ATTACKCIApager attackamericaLebanonIranMOSSAD
Share
Tweet
SendShare
Previous Post

பதிலடிக்கு தயாராகும் ஹிஸ்புல்லா – பேஜருக்குள் வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies