உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK - சிறப்பு கட்டுரை!
Jul 28, 2026, 11:32 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உலகின் முதல் டிஜிட்டல் ஆயுதம் : ஈரானில் நடத்தப்பட்ட CYBER ATTACK – சிறப்பு கட்டுரை!

Murugesan M by Murugesan M
Sep 23, 2024, 08:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

லெபனானில் நிகழ்ந்த PAGER வெடிப்பு தாக்குதலுக்கு இஸ்ரேல் உளவு அமைப்பான MOSSAD-தான் காரணம் எனக் கூறப்படும் நிலையில் அந்நிறுவனமும் அமெரிக்காவின் CIA-வும் இணைந்து ஈரானில் நடத்திய முக்கியமான CYBER ATTACK-ஐப் பற்றி இந்தத் தொகுப்பில் பார்க்கலாம்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த 2009ஆம் ஆண்டு, அதிபர் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. அதில் பங்கேற்பதற்காகச் சென்ற பெண் ஒருவர், அரசு ஆதரவு பெற்ற ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது நடந்த சில நாட்களிலேயே ஈரானின் நடான்ஸ் அணுசக்தி மையத்தின் மீது சைபர் தாக்குதல் நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றது அமெரிக்க உளவு நிறுவனமான CIA. அதற்காக இஸ்ரேலின் MOSSAD-உடன் இணைந்து Stuxnet என்ற வைரஸை உருவாக்கியது. அதுவே உலகின் முதல் DIGITAL ஆயுதம் எனக் கருதப்படுகிறது.

இரண்டாயிரமாம் ஆண்டில் இருந்தே Stuxnet வைரஸ் உருவாக்கத்தில் ஈடுபட்டிருந்த அமெரிக்காவும் இஸ்ரேலும் அந்த OPERATION-க்கு ‘OLYMPIC GAMES’ என்று பெயர் வைத்திருந்தன. முந்தைய வைரஸ்களைப்போல் அல்லாமல் புதுவிதமாக உருவாக்கப்பட்டது Stuxnet. தொழிற்சாலைகளில் உள்ள கருவிகளைக் கட்டுப்படுத்தும் வகையில் அது வடிவமைக்கப்பட்டது. குறிப்பாக நடான்ஸ் அணுசக்தி மையத்தில் யூரேனியத்தை செறிவூட்ட பயன்படுத்தப்படும் மைய விலக்கு சுழற்சிக் கருவியை ATTACK செய்வதே Stuxnet வைரஸின் முக்கியப் பணி.

நடான்ஸ் அணுசக்தி மையத்துக்கும் வெளி உலகுக்கும் இணைய தொடர்பு கிடையாது என்பதால் PEN DRIVE மூலம் முதல் CYBER ATTACK நடத்தப்பட்டது. ஆனால் FIRST VERSION என்பதால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. அதனால் அதைவிட பயங்கரமான மோசமான VERSION-ஐ CIA-வும் MOSSAD-ம் உருவாக்கின.

ஒரு கறுப்பு ஆடு மூலம் UPDATED Stuxnet MALWARE, நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள் அனுப்பப்பட்டது. இந்த முறை பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது Stuxnet வைரஸ். நடான்ஸ் அணுசக்தி மையத்துக்குள்ளும் ஈரானின் பிற பகுதிகளுக்கும் வேகமாக பரவியது. இன்னும் சொல்லப்போனால் ஈரானைத் தாண்டி பிற நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியது.

Stuxnet வைரஸ் பல்வேறு நாடுகளுக்கு பரவிய போதும் OPERATION நிறுத்தப்படவில்லை. சைபர் தாக்குதல் குறித்து ஈரானுக்குத் தெரியாது என்பதால் அதைத் தொடர்ந்து நடத்தின CIA-வும் MOSSAD-ம். ஒருகட்டத்தில் இந்த விஷயம் ஈரான் அரசுக்கு தெரிந்துவிட்டது. அதனைத் தொடர்ந்து சைபர் பாதுகாப்பை அதிகரிக்கத் தொடங்கியது அந்நாட்டு அரசு.

நடான்ஸ் அணுசக்தி மையத்தில் இருந்த ஏழாயிரம் மைய விலக்கு சுழற்சி கருவிகளில் ஆயிரம் கருவிகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்த தாக்குதல் பேரழிவை ஏற்படுத்தாவிட்டாலும் ஈரானின் அணு ஆய்வில் குறிப்பிடத்தக்க தாமதத்தை ஏற்படுத்தியது. யுரேனியம் செறிவூட்டலை பாதியில் நிறுத்திவிட்டு பாதிப்புக்குள்ளான கருவிகளை மாற்றும் நிலைக்கு ஈரான் தள்ளப்பட்டது.

இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான் உள்பட பல நாடுகள் Stuxnet வைரஸால் பாதிக்கப்பட்டன. இந்தியாவில் 80 ஆயிரம் கணினிகளை Stuxnet ATTACK செய்ததாகவும் அதனால் முக்கிய உட்கட்டமைப்புப் பணிகள், மின் உற்பத்தி நிலையங்கள் பாதிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியானது.

தொழில்நுட்பம் பெரிய அளவில் வளராத காலத்திலேயே இவ்வளவு வேலைகளை பார்த்த MOSSAD, தற்போதைய TECH யுகத்தில் PAGER வெடிப்பை நிகழ்த்தியதில் ஒன்றும் வியப்பில்லை அல்லவா?

Tags: CYBER ATTACKCIApager attackamericaLebanonIranMOSSAD
ShareTweetSendShare
Previous Post

பதிலடிக்கு தயாராகும் ஹிஸ்புல்லா – பேஜருக்குள் வெடிபொருட்களை இஸ்ரேல் வைத்தது எப்படி? சிறப்பு கட்டுரை!

Next Post

கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை வழக்கு – பாஜக ஆர்ப்பாட்டம்!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies