ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Jan 14, 2026, 06:26 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது போல் அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், நேற்று இரவு அனுமதி கோரிய மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

எத்தனை பேர் பங்கேற்பார்கள், யார் நடத்துகிறார்கள் என்ற விவரங்கள் இல்லை என காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனுமதி வழங்க கூடாது என்பதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், கடந்த முறை தமிழகத்தில் 43 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இந்த முறை 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்  என்றும்,  தொடங்கும் முடிவடையும் இடம், யார் பொறுப்பு போன்ற தகவல் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் அனுமதி கோரிய மனுவில் இல்லை என்றும்  இதனால் பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அனுமதி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுக்கப்படுகிறது என  ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் அனுமதி கோரி மனு அளித்தவரிடமே அந்த தகவல்களை காவல்துறை பெற்றுக் கொள்ளாலேமே என கேள்வி எழுப்பிய  நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவில் தகவல்கள் இல்லை என்றால் மனு அளித்த நபரை வரவழைத்து என்ன பிரச்சனக்கள் உள்ளது என்பதை ஏன் காவல்துறை விளக்கவில்லை என்றும் வினவினார்.

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு  காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: rss march casejudge jayachandranChennaichennai high courtRSSrss march
ShareTweetSendShare
Previous Post

கோடநாடு எஸ்டேட் வழக்கு – தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி – 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Related News

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

Load More

அண்மைச் செய்திகள்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies