ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Aug 19, 2025, 10:11 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Web Desk by Web Desk
Sep 26, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது போல் அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், நேற்று இரவு அனுமதி கோரிய மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

எத்தனை பேர் பங்கேற்பார்கள், யார் நடத்துகிறார்கள் என்ற விவரங்கள் இல்லை என காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனுமதி வழங்க கூடாது என்பதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், கடந்த முறை தமிழகத்தில் 43 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இந்த முறை 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்  என்றும்,  தொடங்கும் முடிவடையும் இடம், யார் பொறுப்பு போன்ற தகவல் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் அனுமதி கோரிய மனுவில் இல்லை என்றும்  இதனால் பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அனுமதி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுக்கப்படுகிறது என  ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் அனுமதி கோரி மனு அளித்தவரிடமே அந்த தகவல்களை காவல்துறை பெற்றுக் கொள்ளாலேமே என கேள்வி எழுப்பிய  நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவில் தகவல்கள் இல்லை என்றால் மனு அளித்த நபரை வரவழைத்து என்ன பிரச்சனக்கள் உள்ளது என்பதை ஏன் காவல்துறை விளக்கவில்லை என்றும் வினவினார்.

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு  காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: rss march casejudge jayachandranChennaichennai high courtRSSrss march
ShareTweetSendShare
Previous Post

கோடநாடு எஸ்டேட் வழக்கு – தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி – 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Related News

பிரதமரின் மூன்றரை கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கும் திட்டம் – அதிகாரப்பூர்வ இணையதளம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அறிவிப்பு!

இன்றைய தங்கம் விலை!

டிஜிபி பதவி தொடர்பான ஐபிஎஸ் அதிகாரி பிரமோத் குமார் மனு – தமிழக அரசு பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு!

சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு – பிரதமருக்கு ஹெச்.ராஜா நன்றி!

சி.பி.ஆருக்கு ஆதரவு அளிக்கவில்லை எனில் திமுகவின் தமிழ்ப்பற்று வேடம் கலைந்து விடும் – தமிழிசை சௌந்தரராஜன்

தெலங்கானாவில் கனமழை – வனதுர்க பவானி கோயிலை சூழ்ந்த வெள்ளம்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் தைரியத்தையும், உறுதித் தன்மையையும் யாராலும் அசைத்து பார்க்க முடியாது – மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இருதரப்பு உறவு குறித்து முக்கிய ஆலோசனை!

கோவையில் சிறுவனின் தொண்டையில் சிக்கிய மிட்டாய் – லாவகமாக எடுத்த ரயில்வே போலீசார்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணித் திருவிழா!

குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வு – இண்டி கூட்டணி ஆலோசனை!

பிரதமர் மோடியுடன் விளாடிமிர் புதின் தொலைபேசியில் பேச்சு – ட்ரம்ப்புடன் நடைபெற்ற சந்திப்பு குறித்து விளக்கினார் ரஷ்ய அதிபர்!

உக்ரைனுக்கு ஆதரவாக டிரம்புடன் ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் சந்திப்பு!

புதினும் ஜெலன்ஸ்கியும் போரை முடிவுக்குக் கொண்டு வர விரும்புகிறார்கள் – ட்ரம்ப் பேட்டி!

மிஸ் யூனிவர்ஸ் இந்தியாவாக ராஜஸ்தானைச் சேர்ந்த மணிகா விஸ்வகர்மா தேர்வு!

மதுரையில் போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்கள் கைது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies