ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு - காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!
Aug 5, 2026, 07:13 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு அனுமதி தொடர்பான வழக்கு – காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

Murugesan M by Murugesan M
Sep 26, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ம் தேதி அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் அதன் நிர்வாகிகள் கார்த்திகேயன் உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்கு  நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆர்.எஸ்.எஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜகோபாலன், கடந்த ஆண்டுகளில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கி உச்ச நீதிமன்ற உத்தரவிட்டதை சுட்டிக்காட்டினார்.

உச்ச நீதிமன்ற உத்தரவு இருந்தாலும் ஒவ்வொரு வருடமும் இது போல் அனுமதி கேட்கும் போதெல்லாம் தமிழக காவல்துறை அனுமதி மறுப்பதாகவும், நேற்று இரவு அனுமதி கோரிய மனுவை காவல்துறை நிராகரித்துள்ளதாகவும் அவர் வாதிட்டார்.

எத்தனை பேர் பங்கேற்பார்கள், யார் நடத்துகிறார்கள் என்ற விவரங்கள் இல்லை என காரணங்களை கூறி ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

அனுமதி வழங்க கூடாது என்பதில் எந்த உள் நோக்கமும் இல்லை என்றும், கடந்த முறை தமிழகத்தில் 43 இடங்களில் ஊர்வலம் நடத்தப்பட்டதாகவும், இந்த முறை 58 இடங்களில் ஊர்வலம் நடத்த அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் வாதிடப்பட்டது.

உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவில் விதித்த நிபந்தனைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்  என்றும்,  தொடங்கும் முடிவடையும் இடம், யார் பொறுப்பு போன்ற தகவல் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் அனுமதி கோரிய மனுவில் இல்லை என்றும்  இதனால் பாதுகாப்பு வழங்குவதில் குழப்பம் ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அனைத்து மாநிலங்களிலும் ஆர்.எஸ். எஸ் ஊர்வலம் நடத்தப்படுகிறது. ஆனால் தமிழ் நாட்டில் மட்டுமே அனுமதி ஒவ்வொரு வருடமும் அனுமதி மறுக்கப்படுகிறது என  ஆர்.எஸ்.எஸ் தரப்பில் வாதிடப்பட்டது.

கூடுதல் விவரங்கள் வேண்டும் என்றால் அனுமதி கோரி மனு அளித்தவரிடமே அந்த தகவல்களை காவல்துறை பெற்றுக் கொள்ளாலேமே என கேள்வி எழுப்பிய  நீதிபதி ஜெயச்சந்திரன், மனுவில் தகவல்கள் இல்லை என்றால் மனு அளித்த நபரை வரவழைத்து என்ன பிரச்சனக்கள் உள்ளது என்பதை ஏன் காவல்துறை விளக்கவில்லை என்றும் வினவினார்.

ஆர்எஸ்எஸ்  அணிவகுப்பு தொடர்பாக  அனுமதி  கோரிய மனுக்கள் மீது எடுக்கப்பட்ட விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய காவல்துறைக்கு  காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி,விசாரணையை வரும் 30 ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

Tags: rss march casejudge jayachandranChennaichennai high courtRSSrss march
ShareTweetSendShare
Previous Post

கோடநாடு எஸ்டேட் வழக்கு – தினேஷ் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை!

Next Post

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி – 46 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி!

Related News

நான் அந்த அர்த்தத்தில் பேசவில்லை – ஆபாச பேச்சு குறித்து உதயநிதி ஸ்டாலின் விளக்கம்!

தமிழக சட்டப்பேரவை இன்று கூடுகிறது – தவெக அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார் மரிய வில்சன்!

விமர்சகர்களை கைது செய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள்; மு.க ஸ்டாலின்

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

உதயநிதியை ரிமாண்ட் செய்யும் எண்ணம் இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மீது 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

ஆடிப்பெருக்கு விழா – காரைக்குடி பதினெட்டாம்படி கருப்பர் கோயிலில் கிடா விருந்து – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பெண்களை இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக குற்றச்சாட்டு – உதயநிதி ஸ்டாலின் கைது!

சென்னை பெரியமேட்டில் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு – மர்ம நபர்கள் தப்பியோட்டம்!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சேர்த்துவிடுவேன் என்று மிரட்டி 40 லட்சம் பணம் பறித்ததாக குற்றச்சாட்டு – பரங்கிமலை காவல் ஆய்வாளர் புஹாரி கைது!

இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது – அனந்த நாகேஸ்வரன்

உஸ்பெகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு – இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை!

திருப்பரங்குன்றம் தீப வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் விண்ணில் பாய காத்திருக்கும் இரு செயற்கைகோள்கள்!

உதயநிதி ஆபாச பேச்சு விவகாரம் : சென்னையில் கைது – தஞ்சையில் விடுவிடுப்பு – முழு விவரம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies