ஜம்மு-காஷ்மீரின் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா பெருமிதம் தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலின் மூன்றாம் கட்ட வாக்குப்பதிவு அக்டோபர் 1-ம் தேதி நடைபெறவுள்ளது. இந்நிலையில் உதம்பூர் பகுதியில் நடைபெற்ற பாஜக தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
அப்போது பேசிய அவர், ஜம்மு-காஷ்மீரின் லால் சௌக் பகுதிக்கு யாரும் எவ்வித பயமுமின்றி செல்லும் சூழலை பாஜக உருவாக்கியுள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.
“2014 முதல், நாங்கள் எஸ்சி, எஸ்டி, தலித்துகள், ஏழைகள் மற்றும் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக அயராது உழைத்து வருகிறோம்.
நமது எல்லைகளைப் பாதுகாத்தோம், சகோதர சகோதரிகளுக்கு இடஒதுக்கீட்டை உறுதி செய்தோம். ஆனால் காங்கிரஸ் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை, அப்துல்லாக்கள் உங்களைப் பற்றி கவலைப்படவில்லை. இதை நினைவில் கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறினார்
நீக்கப்பட்ட சட்டப்பிரிவு 370 ஐ ஒருபோதும் மீண்டும் கொண்டு வர முடியாது என்வும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சி தலைவர்கள் தங்கள் வாரிசுகள் மற்றும் உறவினர்கள் குறித்து மட்டுமே சிந்தித்ததாகவும் அமித் ஷா தெரிவித்தார்.